Sunday, October 18, 2009

‘ஈழம் காத்த தானைத் தலைவன் ராஜபக்சே-...’திருமா வழங்கும் புதிய பட்டம்?

திருமாவளவன் அவர்களே
வணக்கம் சொல்ல விருப்பமில்லை. நாங்கள் முகமன் கூறும் தகுதியை நீங்கள் இழந்து வெகு நாட்கள் ஆகின்றன. இந்தக் கடிதமும் நீங்கள் மனம் மாறுவீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதப்படவில்லை. ஏனெனில், மூடநம்பிக்கைகளை ஒழிக்கப் புறப்பட்டவன் எங்கள் பாட்டன். அவன் வழியில் நடப்பவர் நாங்கள்.

கசாப்புக் கடைக்கு இழுத்துச் செல்லப்படும் ஆடு, அரிவாள் தன் கழுத்தில் இறங்கும் வரை தன்னை வளர்த்தவன் மீது நம்பிக்கை கொண்டு அவன் முகத்தைப் பார்த்தபடியிருக்குமே...அதுபோல் எங்கள் மக்களில் ஒரு பெருந்திரள் உங்கள் மீது இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளது. அவர்களுக்கு உங்கள் முதுகில் மறைந்திருக்கும் அரிவாளைக் காட்டவே இக் கடிதம்.

’அடங்க மறு; அத்து மீறு’ என்ற கட்டளைகளுடன் தாழ்த்தப்பட்ட மக்களின் சம உரிமைக்காக அரசியல களம் கண்ட நீங்கள், 2000ஆம் ஆண்டு தேர்தல் அரசியலில் நுழைந்தீர்கள் என்பது உங்களை நம்பும் அப்பாவிகளிடம் நீங்கள் காட்டும் வரலாறு.

ஆனால்...உண்மையில் இதை இப்படிச் சொல்ல வேண்டும்:
’தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் ஆதிக்க சாதி வெறி பிடித்த கும்பலின் தலைவருமான...குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் பகைவரான கருப்பையா மூப்பனார் உங்கள் கட்சிக்கு நல்ல விலை கொடுத்து வாங்கிய சம்பவம் அது’

இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா?
எந்த மூப்பனார்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் வாயில் சாணிப்பால் கரைத்து ஊற்றினார்களோ...எந்த மூப்பனார்கள் இன்று வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தேநீர்க் கடைகளில் இன்று வரை தனிக்குவளை வைத்திருக்கிறார்களோ...எந்த மூப்பனார்கள் தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களை பறித்துக்கொண்டார்களோ...அந்த மூப்பனார்களின் தலைவர்தான் கருப்பையா மூப்பனார் என்பதை நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்!
மூப்பனார்களுக்கெதிராகவும் வன்னியர்களுக்கு எதிராகவும் நீங்கள் முழங்காத கிராமங்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலும் கடலூர், வட ஆற்காடு மாவட்டங்களிலும் குறைவு.

ஆனால்...அதெல்லாம் நீங்கள் தேர்தல் சாக்கடையில் இறங்கி புழு பிடித்துத் தின்னத் தொடங்கியதற்கு முன்பு.

’ஐயா...மூப்பனார் அவர்கள் சமூக நீதி காத்த தலைவர்’
-இது நீங்கள் கருப்பையாவுக்குக் கொடுத்த பட்டம்தான்! சிதம்பரம் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இப்படிப் பேசினீர்கள்.

அதன்பிறகு...ஆதிக்க சாதி கருப்பையா...சமூக நீதி காத்த தலைவர் மூப்பனார்’ என்று அழைக்கப்பட்டார். எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்தான்.
’வன்னியர்கள்தான் வட மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டவரின் முதல் எதிரி!’
-என்ற அறைகூவல் உங்களுக்கு நினைவிலிருக்க நியாயமில்லை.
ஆனால்...
உங்கள் உசுப்பேற்றுதல்களால்...அடங்க மறுத்து அத்து மீறி வன்னியர்களுடன் மோதி கை கால்களை இழந்த பல நூறு தாழ்த்தப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு அந்த அறைகூவல் மறந்திருக்காது. சாதி மோதல்களில் இறந்தே போன தாழ்த்தப்பட்ட தோழர்களின் குடும்பங்கள்,
நீங்களும் மருத்துவர் ராமதாசும், வன்னியர் சங்கத் தலைவர் குருவும் கை கோர்த்து நடப்பதையும் தொலைக்காட்சி செய்திகளில் சிரிப்பதையும் பார்க்கும்போது மனதுக்குள் என்ன நினைப்பார்கள் என்று என்னைப் போன்ற சாமானிய மனிதனுக்குத் தெரியும்.
உங்களைப் போன்ற தலைவர்களுக்குத் தெரியுமா?

’வட மாவட்டங்களில் இருந்த சாதி மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்ததே எங்கள் அரசியல் கூட்டணிதான்’
-என்று நீங்களும் ராமதாசும் எத்தனையோ முறைகள் அறிவித்திருக்கிறீர்கள்.

அடடா...
சாதிச் சிக்கலை நீங்கள் இருவரும் எவ்வளவு எளிதாகத் தீர்த்துவிட்டீர்கள்!



வட மாவட்டங்களில் வன்னியர்கள்தான் இன்று வரைக்கும் ஆதிக்க சாதியாக நீடிக்கிறார்கள் என்பதும், பாமக, தேமுதிக, ஜெகத்ரட்சகன் ஆகிய அரசியல் காரணிகள் வன்னிய ஆதிக்கத்தை முன்னைக் காட்டிலும் வலுப்படுத்தியுள்ளன என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்!

ஏனெனில்...தேர்தல் கூட்டணி அமைப்பதே சாதி மோதலைத் தவிர்க்கும் வழி என்ற புதிய கோட்பாட்டைக் கண்டுபிடித்தவராயிற்றே நீங்கள்!

இன்றும்...வட மாவட்டங்களில் தேர்தல் பதவிகள்...எம் எல் ஏ முதல் கவுன்சிலர் வரை வன்னிய சாதியினரே ஆதிக்கம் செய்கின்றனரே...

வட மாவட்டங்களில் வாண்டையார்கள், ரெட்டியார்கள், வன்னியர்கள் உள்ளிட்ட ஆதிக்க சாதியினர் ஆகப் பெரும்பான்மையான நிலங்களை வைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களை வெறும் கரும்பாலைக் கூலிகளாகவும் விவசாயக் கூலிகளாகவும் வைத்திருக்கின்றனரே...

விழுப்புரம், பண்ருட்டிப் பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் அலை அலையாகக் கிளம்பி...தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கரும்பு வெட்டும் கூலிகளாகப் போய்க்கொண்டிருக்கின்றனரே...

கரும்பு வெட்டப் போகும் தாழ்த்தப்பட்ட மக்களின் அவலங்களில் முக்கியமானது...அவர்கள் மாதக் கணக்கில் வெளி மாவட்டங்களில் தங்க வேண்டியிருப்பதால் குடும்பத்தோடு மனைவி மக்கள் குழந்தைகள் என அனைவரையும் அழைத்துச் சென்று...கூடாரங்கள் அடித்துத்தான் தங்குகின்றனர்.

இது போன்ற சூழல்களில் அடித்தட்டுப் பெண்களும் குழந்தைகளும் எவ்வளவு மோசமாக சுரண்டப்படுவார்கள் என்று எங்களைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

உங்களைவிட...’விளிம்பு நிலை’ வித்தகர் உங்கள் சாணக்கியர் ரவிக்குமாருக்கு மிக மிக நன்றாகத் தெரியும்.

இப்படிப் பிழைப்புக்காக...குடும்பங்களோடு அலையும் மக்களை உலகம் ‘நாடோடிகள்; ‘உள் நாட்டு அகதிகள்’ என்றெல்லாம் அழைக்கிறது.

நீங்கள் இவர்களுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள் திருமா?

‘மாண்புமிகு வாக்காளப் பெருமக்கள்’-என்றுதானே?

நீங்களும் ராமதாசும் வைத்துக் கொண்டுள்ளது பிழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை. அதைக் கூட்டணி என்று நீங்களும் உங்களைப் போன்றவர்களும் அழைப்பீர்கள்.

சாதி சமத்துவத்திற்கும் உங்கள் பிழைப்புவாதப் புரிந்துணர்வுக்கும் யாதொரு உறவும் இல்லை.

தமிழக அரசியலில் ...தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியலில் உங்கள் சாதனைகள் இவைதான்.

இதோடு நீங்கள் நிறுத்தியிருக்கலாமே...!

தமிழீழ மக்களையும் விடுதலைப் புலிகளையும் கூடவா விற்றுப் பிழைக்க வேண்டும்?

இனத்தை அழிக்கும் காங்கிரசுக்கு எதிராகத் தமிழ்நாட்டின் கணிசமான இயக்கங்களும் தேர்தல் கட்சிகளும் தீவிரமாக வேலை செய்தபோது...காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தீர்கள். இது முதுகில் குத்திய பாவம் என்பதை உங்கள் மூளையின் ஒரே ஒரு செல் கூட உரைக்கவில்லையா?

இப்போது வன்னி முகாம்களுக்கு நீங்களும் உங்கள் புதிய கூட்டாளிகளும் இன்பச் சுற்றுலா போனபோது, அங்கே கதறிய மக்கள் முகங்களைப் பார்த்தபோது ஒரே ஒரு கணம் கூட...
‘இந்த முள்வேலி வாழ்க்கைக்கு நானும்தான் ஒரு காரணம்’
என்ற உண்மை மின்னல் போலவேனும் வந்து போகவில்லையா?

அப்படி எந்த நியாய உணர்வும் உங்களுக்கு இல்லை என்பதை உங்கள் பேட்டிகள் நிறுவுகின்றன.

ராஜபக்சே உங்களைப் பார்த்து ‘நல்ல வேளை கடைசி நேரத்தில் நீங்கள் பிரபாகரனோடு இல்லை. ஒருவேளை இருந்திருந்தால்...நீங்களும் காணாமல் போயிருப்பீர்கள்’ என்று எள்ளி நகையாடிய சேதியை இணையத்தில் படித்துவிட்டு உளம் கொதித்தோம்.

ஆனால்...அந்த கிண்டலைக் கேட்ட பிறகும் நீங்கள் ராஜபக்சேவுடன் உரையாடி மகிழ்ந்து...எந்தக் கணத்திலும் அவன் மனம் சுருங்காமல் நடந்துகொண்டீர்கள்.

வெளியே வந்ததும் பத்திரிகையாளர்கள் இதைப் பற்றிக் கேட்டபோது,
‘அது ஒரு ஜோக்...அவர் தமாசுக்கு அப்படிச் சொன்னார்’ என்று அதே உங்கள் பிராண்ட் அசட்டுச் சிரிப்பு சிரித்தீர்களே.

கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் போனது எப்படி?
சுய மரியாதை என்ற உணர்வு சில பிராணிகளுக்குக் கூட உள்ளது என்கிறது விஞ்ஞானம். ஆனால்...உங்களுக்கு அது அறவே இல்லாமல் போனது எப்படி?

எழு இனி நெஞ்சம் செல்க யாரோ
பருகுஅன்ன வேட்கை இல்வழி’
-என்ற புறநானூறுப் பாடல் பெருஞ்சித்திரனார் எனும் மானமுள்ள புலவர் இயற்றியது.

இளவெளிமான் எனும் மன்னனைச் சந்தித்துப் பரிசில் பெறச் சென்றார் பெருஞ்சித்திரனார். அம்மன்னன் அவருக்குப் பரிசில் அளித்தான். ஆனால் அந்த நேரத்தில் மன்னன் முக பாவம் சரியில்லை.
இதைக் கண்ட பெருஞ்சித்திரனார்,
’உள்ளம் மகிழ்ச்சி அடையாமல், முக மாற்றம் அடைந்து பரிசில் அளித்தால்...மானமுள்ளவர் அதை ஏற்கமாட்டார். எப்படிக் கொடுத்தாலும் வாங்குபவர் உளர். ஆனால்...நான் அப்படிப்பட்டவன் அல்ல.
இந்த உலகம் பெரிது. நான் வேறிடம் செல்கிறேன்’
-என்று பாடிவிட்டு வெளி நடப்பு செய்தார்.

பரிசில் பெறச் சென்ற புலவரே மன்னனின் முகம் பார்த்து செருக்குடன் பரிசில் வாங்காது சென்ற மரபு நம் மரபு.

நீங்கள் சென்றது இனத்தின் எதிரியான ராஜபக்சேவின் விருந்தினராக. அவன் உங்களைப் பார்த்துப் பேசிய கிண்டல் சொற்கள் உங்களைப் பற்றியது மட்டுமல்ல; தமிழீழத் தேசியத் தலைவரையும் குறித்தவை.

ஆனால்...உங்களுக்குக் கொஞ்சமும் .............இல்லாமல் பல்லிளித்துவிட்டு வந்தீர்கள்.
அவன் கேலி பேசிய மறு கணமே...அந்த இடத்திலிருந்து வெளிநடப்பு செய்ய வேண்டும் என்று ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை?

அதைக் காட்டிலும், ஜூனியர் விகடனில் நீங்கள் அளித்துள்ள நேர்காணலில்,
’ராஜபக்சே தன் வக்கிரங்களைத் திரட்டி அந்த வார்த்தைகளைச் சொன்னார்’
என்று முழங்கி இருக்கிறீர்கள்.

சென்னை விமான நிலையத்தில் ’அது ஒரு ஜோக்’காகத்தானே தெரிந்தது உங்களுக்கு?
ஜூவியில் பேசும்போது மட்டும் எங்கிருந்து வந்தது கோபம்?

விடை எனக்குத் தெரியும்!

விமான நிலையத்தில் உங்கள் அருகில் உங்கள் எஜமானர்கள் – உங்களுக்குப் படியளப்பவர்கள்- டி ஆர் பாலு, கனிமொழி, காங்கிரஸ் எம்பிக்கள் இருந்தனர். அவர்களை வைத்துக் கொண்டு ராஜபக்சேயைத் திட்டும் துணிவும் செருக்கும்நேர்மையும் உங்களுக்கு இல்லை.

அதே வேளை தமிழீழ ஆதரவுக் கூட்டத்தை ஏமாற்றாமல் உங்களால் அரசியல் வியாபாரம் செய்ய முடியாது. அதனால்...பாதுகாப்பாக பதுங்கிகொண்டு பத்திரிகையாளரிடம் பேசும்போது எகிறி அடிக்கிறீர்கள்.

இது கருணாநிதி, ராமதாஸ் ஆகிய உங்கள் முன்னோடிகளிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்ட கலை.

ராஜபக்சே எனும் பக்கத்து நாட்டுக்காரனைக்கூட எதிர்க்கும் துணிவும் நேர்மையும் இல்லாத நீங்கள்...தங்களை சாதி ஆதிக்கப் பிடியிலிருந்து விடுவிப்பீர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறதே பாவப்பட்ட இளைஞர் கூட்டம். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

மூப்பனார் சமூக நீதி காத்த தலைவர் ஆனது போல...
ராஜபக்சேவுக்கு என்ன பட்டம் தரலாம் என்று யோசித்து வையுங்கள்...
‘ஈழம் காத்த தானைத் தலைவன் ராஜபக்சே...’
எப்படி இருக்கிறது...?




நாக்பூரில் உள்ள புத்த மடத்தில் புத்தனை வணங்கும் திருமா...
வன்னி சென்றபோது சிங்கள வெறிப் படையினரால் இடிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் இருந்த இடங்களையாவது பார்வையிட்டாரா...?

ஒருவேளை அவர் விரும்பினாலும் அவரைச் சுற்றுலாவுக்குக் கூட்டிச் சென்ற அவர் எஜமானர்கள் விட்டிருக்க மாட்டார்கள்!

Thursday, October 15, 2009

தீபாவளி வாழ்த்துக்கள்!



மத்தாப்புச் சிதறல்களில்
முகாம் குழந்தைகளின்
குருதிச் சிதறல்கள்
தெரியவில்லை என்றால்...

சரவெடிகளின்
இணைப்பு நூல்களைப் பார்க்கும்போது
முள் வேலியின்
சாயல் தெரியவில்லை என்றால்...

பூச்சட்டியின்
தீச் சுடர் மேலே
எழும்பி சாம்பலாய்
இறங்கும்போது
எரிந்த
எம் மக்களின்
பிண வீச்சம்
வீசவில்லை என்றால்...

நரகாசுரனைக் கடவுள் அழித்தாரென்ற
கதை கேட்கும்போது
வெள்ளைக் கொடியேந்திய
எம் தளபதிகள்
செங்குருதியில் மிதந்த
காட்சி கண்ணில் வரவில்லை என்றால்...

இனிப்புகள் பரிமாறிச்
சுகிக்கும்போதெல்லாம்...
பாலில்லா முலையில்
குருதி வழிய...
நா வறண்ட
எம் பிஞ்சுகள்
கதறும் ஓசை
உங்கள் காதுகளில்
விழவே இல்லை என்றால்...

உங்களுக்கு
என்
தீபாவளி வாழ்த்துகள்!

Wednesday, October 14, 2009

’உங்கள் ஓட்டு அருமை அண்ணன் பிடல் காஸ்ட்ரோவுக்கே...’

மாண்புமிகு வாக்களிக்கும் இயந்திரங்களுக்கு வணக்கம்!
நம்ம ‘ஜனநாயகத்துல’ ரெண்டு இயந்திரங்கள் இருக்கு.

ஒண்ணு, வாக்குப் பதிவு செய்யறது. அடுத்தது, வாக்குப் போடறது!
மொத எந்திரத்துக்கு, கரண்ட்டு வேணும்.

ரெண்டாவது எந்திரத்துக்கு...கரன்சி, சாராயம், பிரியாணி, பொம்பளைங்க, பலான படம்...இன்னும் தினுசு தினுசா வேணும்.
இதையெல்லாம் குடுத்தாத்தான் இந்த இயந்திரம் வேலை செய்யும்.

ஆனா...இப்ப நான் பேசப் போறது இந்த எந்திரங்களைப் பத்தி இல்ல...!

தெனாலிராமன்....ஒரு குதிரை வளர்த்தான். அந்தக் குதிரைக்கு தினமும் ஒரே ஒரு புல்லை ஓட்டை வழியா காட்டினான். ஒரு முறை மந்திரி அந்த ஓட்டை வழியா...மூஞ்சை நீட்டிப் பார்த்தான். குதிரை புல்லுன்னு நினைச்சு...தாடிய கடிச்சு வச்சிடுச்சு.

வாக்குப் போடற எந்திரங்கள்லாம்...தெனாலிராமன் குதிரை மாதிரிதான்.
அதனால...பாவம்.... அதுகளை விட்டுருவோம்!

ஒலக அரசியலைக் கரைச்சி குடிச்ச...

வர்க்கப் பார்வைக்கும் இனப் பார்வைக்குமான ஆறு வித்தியாசங்களை அரை நொடியில கண்டு புடிக்கிற தெறமை உள்ள...

”புலிகள் இல்லன்னா அந்த நாட்டுல தமிழனுங்க தண்ணி கூட குடிக்க முடியாது ஐயா...”

”இந்திய அரசாங்கம் மட்டும் சிங்களனுக்கு உதவி செய்யலைன்னா நம்ம தம்பி எப்பவோ நாடு அமைச்சிருப்பாரு...நானும் பொண்டாட்டி புள்ளைகளோட டூர் அடிச்சிட்டு வந்திருப்பேன்....”

‘சார்...இங்க எந்தக் கட்சியையுமே நம்ப முடியாது சார்...எல்லாருமே கரப்ட்டு...இவங்களைப் பொறுத்த வரைக்கும்...ஈழப் பிரச்சினை ஒரு எலக்க்ஷன் மேட்டர்...ஓட்டு வாங்கற வரைக்கும் பேசுவாங்க...அப்பொறம் மறந்துடுவாங்க...’
-இப்படியெல்லாம் ’வெவரமாக’ப் பேசும் இன உணர்வாளர்களே...உங்களுக்குத்தான் இந்தக் கடுதாசி!

தமிழ்நாட்டுல ஆயிரம் பிரச்சினை இருக்கு.
‘எவ்ளோ...அடிச்சாலும் தாங்குறான் இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாய்ங்க...’ன்னு நாம ‘பெருந்தன்மையாத்தான்’ விட்டோம். ஆனா...இந்த சிங்களப் பன்னிங்க நம்மள இளிச்சவாயனுகன்னு ‘தப்பா’ நினைச்சுக்கிட்டு...மீன் புடிக்கப் போனா சுட்டுக் கொல்லுதுங்க.

’தம்பி...நாங்க அடி வாங்காத ஊரே கிடையாது...
கர்நாடகாக் காட்டுக்குள்ள...1 லட்சம் பேராச் சேர்ந்து அகதியா தமிழ்நாட்டுக்கு வந்தவய்ங்க...என்னமோ...400 பேரைக் கொன்னுட்டு பீத்திக்கிற...?’-ன்னு கேட்டு சிங்களனையே பேச்சு சாதுர்யத்தால மடக்கிப்புட்டோம்!

அதனால...நம்ம ஊர்ல நாம பிரிச்சு மேயற பெருமைங்களை எல்லாம் விடுங்க.

தமிழீழத்துல கடந்த ரெண்டு வருசமா...கொஞ்சம் கொஞ்சமா நம்ம மக்களைக் கூறு போட்டு கொன்னுக்கிட்டிருந்தானே...அப்ப அங்கேருந்து நாமல்லாம் மனசுக்குள்ள் கோயில் கட்டிக் கும்பிடற இயக்கம் நம்ம கிட்ட ‘ஏதாவது செய்யுங்க...எங்க மக்களைக் காப்பத்துங்க...’ன்னு கதறினிச்சே...!

அதுக்கு என்ன செஞ்சோம்?

வீடு எரியுதுன்னு கத்தினவங்ககிட்ட ’எருமை மாட்டை அனுப்பறேன்...அது மூத்திரம் பேய்ஞ்சு நெருப்பை அணைச்சுடும்’னு சொன்னானாம் ஒருத்தன்.

அது மாதிரி...அக்கரையிலேருந்து ‘எமக்காகவும் பேசுங்களேன்’னு கதறினப்ப...நாம எல்லாரும்,

’தேர்தல் மட்டும் முடியட்டும்...அப்புறம் வச்சுக்கிறோம் கச்சேரி...அது வரிக்கும் போற உசிரு போகட்டும்...கவலப் படாதீங்க...’ன்னு பதில் சொன்னோமே...நினைப்பு இருக்கா...?
அதோடயா நிறுத்தினோம்?

தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி இன விரோதமானது.
அ.தி.மு.க – பா.ம.க – ம.தி.மு.க கூட்டணிதான் இனத்தைக் காக்கும்...னு சொல்லி ’எறங்கி’ வேலை செஞ்சோமே...!

நான் தெரியாமத்தான் கேக்கறேன்...

பக்கத்துல ஒரு இனம் அழியும்போது...இங்க என்ன மசிறுக்குடா தேர்தல்...?
மொதல்ல அங்க போரை நிறுத்து...
அப்புறம் இங்க தேர்தல் நடத்து...!

-இப்படி சொல்லற நேர்மையும் தில்லும் இங்க உள்ள ஒரு ஓட்டுப் பொறுக்கிக்கும் ஏன் வரலை?

அட...அதுகதான் பொறுக்கிகன்னு தெரியுதுல்ல...?
நாமெல்லாம்...உலக அரசியல் தெரிஞ்சவங்களாச்சே... நமக்கு புத்தி எங்க போச்சு?
கந்தனுக்கு புத்தி கவட்டைக்குள்ளம்பாங்க...நம்மள மாதிரி ’இன உணர்வாளர்களுக்கு’ புத்தி...
வாக்குப் பெட்டிக்குள்ள...!

தேர்தல் என்ன அம்புட்டு முக்கியமா? அட...இந்தத் தேர்தல் எந்த நாட்டுக்குப் பிரதமரைத் தேர்ந்தெடுக்க...? நமக்குத்தான் நாடே இல்லையே...!
என் இனத்தை அழிக்காதேன்னு ஒரு கூட்டம் பேசினா கூட புடிச்சு உள்ள வைப்பான். அப்புடீன்னா...இது எவன் நாடு? சத்தியமா நம்ம நாடு இல்ல!

அப்படிப்பட்ட...அடிமைங்க நமக்குத் தேர்தல் எதுக்கு?
அதுவும்...அங்க நம்ம இனம் கொத்துக் கொத்தா செத்து விழும்போது...எதுக்குத் தேர்தல்?

ஆட்சி மாறினா...அதாவது பாஜக வந்தா...ஈழம் கிடைச்சிடுமா?
இல்ல...போரை நிறுத்திடுவானா?

அப்புடி நீங்க நம்பினா...குளோபல் வர்மிங் அதிகமாகி இந்தியா பூரா கடலுக்குள்ள போற வரைக்கும் உங்களுக்கு நாடு கிடைக்காது.
ஈழத்தை எதிர்ப்பது-ங்கறது இந்திய அரசோட கொள்கை. காங்கிரசோட கொள்கை இல்ல. கட்சி மாறினாலும் ஆட்சி மாறினாலும்...அரசோட கொள்கை மாறாது.

பாஜகதான் மதவாத கட்சி...அதனால காங்கிரஸ்தான் ஜெய்க்கணும்னு இஸ்லாமியருங்க பேசுறதக் கேக்கும்போது சிப்பு சிப்பா வரும்.

அட...ங்கொக்க மக்கா....பாபர் மசூதிய இடிச்சப்ப அதைத் தடுக்காம...இடிக்கற இந்துத்துவா வெறி நாய்ங்களுக்கு பிஸ்கட் போட்டு பாதுகாப்பு கொடுத்தது...காங்கிரஸ் கட்சி பிரதமர் நரசிம்ம ராவ்தானே...?
-ன்னு பாய்ங்ககிட்ட சொல்லுவேன்.

’அப்ப...யாரைத் தான் ஆதரிக்கிறது பாய்...?’ன்னு எதிர்க் கேள்வி கேப்பாங்க.

நமக்கெல்லாம் இதுதான் பிரச்சினை.
யாரையாச்சும் ’ஆதரிச்சே’ ஆகணும்!

திருடன்
மொள்ள மாரி
தெள்ளவாரி
முடிச்சவிக்கி
பொம்பளப் பொறுக்கி
-இதுல யாரையாவது ‘ஆதரிக்கணும்னா’. உப்பு போட்டு சோறு திங்கறவன்...சூடு சொரணை உள்ளவன்...மூக்கு மேல கோவம் வந்து
‘நான் என்னா...ம...க்குடா இதுல எவனையாச்சும் ஆதரிக்கணும்?’ னு கேப்பான்.

ஆனா...நமக்குத்தான் அதெல்லாம் கிடையாதே...! அதனால, ’சார்...இந்த எலக்சன்ல மொள்ளமாரிக் கூட்டணிக்கே ஓட்டுப் போடலாம் சார்... லாஸ்ட் டைம் தெள்ளவாரிங்களுக்குப் போட்டு சரியா பர்ஃபாம் பண்ணல்லை’ன்னு ரொம்ப புத்திசாலித்தனமா முடிவு எடுப்போம்.

ஆக...காங்கிரசும் பாஜவும் வேற வேறன்னு நினைச்சா...பாவம் உங்களுக்கு அரசியல் புரியலன்னு அர்த்தம்! பாஜக ஆட்சியிலதானே...பொடா சட்டம் வந்துச்சு?

நம்ம புரட்சிப் புயலு...கூட ’தீவிரவாதத்தை எதிர்க்கோணும்னா பொடா மாதிரி ஒரு புனித சட்டம் தேவை...’ன்னு கர்ஜனை பண்ணிக் கை தூக்கினாரே...!

தமிழ்நாட்டுல அந்தச் சட்டம் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மேலதான் பாய்ஞ்சுது...! அதுல நம்ம புயலும் சிக்கி சின்னாபின்னமானது ஒரு காமெடி கதை!

இது சின்ன கொசுறுதான். நீங்கள்லாம் நிறைய படிச்சவங்க...நிறைய உதாரணம் தேவையில்ல.

’என் தலைவர் பிரபாகரனுக்கு ஆபத்தென்றால்...தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும்’னு சொன்னிச்சு...புரட்சிப் புயல்.

அந்தத் தலைவனுக்கு உண்மையிலேயே ஆபத்து வந்திச்சே...மே 17 ஆம் தேதி...
புயல் என்னா செஞ்சிக்கிடிருந்திச்சி...?
ஓட்டு எண்ணிக்கையில இருந்திச்சு!

சரி...நம்ம தமிழ்க் குடிதாங்கி மருத்துவர்...இனமானப் போராளி...என்ன செஞ்சாரு?
மகன் மத்திய மந்திரியா இருந்து அடிச்ச கோடிகளை எங்கே பதுக்கறதுன்னு ரூம் போட்டு யோசிச்சுக்கிட்டிருந்தாரு.

இந்த லெப்டு ரைட்டுங்கள்லாம்...?
’தோழர்...தேர்தல் என்பது ஜனநாயகப் புரட்சியோட முதல் படிநிலை...ஆனா...சிறீலங்காவுல நடக்கறது ஒரு அவசர இனவாத கலகம்...’இப்புடீல்லாம் உளறிக் கொட்டிக்கிட்டு இருந்துச்சுகளோ!

நம்ம இனமானப் போராளி தமிழ்நாட்டு பிரபாகரன்(சத்தியமா...இப்புடித்தான் போட்டுக்குறாரு) திருமா...வழக்கம் போல விளம்பரப் பதாகைகள்ல போடறதுக்கு ஃபோட்டொவுக்கு போஸ் குடுத்துக்கிட்டிருந்தாரா...?

ஒருத்தன் கூட அன்னிக்கு...(மே 17) ரோட்டுக்கு வரலையேடா!
பாவிகளா...!

இத மட்டும் செஞ்சிருந்தா...அன்னிக்கு செத்த 25 ஆயிரம் பேர்ல ஒரே ஒரு உசிரையாச்சும் காப்பாத்தியிருக்கலாமே...!
செய்யலையே...

ஒங்களையெல்லாம் எங்க தலைவன் நம்பினானே...
ஒங்களையெல்லாம் நாட்டுக்குக் கூட்டிட்டுப் போய்...அரசியல் பாடம் நடத்தி...இனம்னா என்னா...போராட்டம்னா என்னா...னு சொல்லிக் குடுத்து அனுப்புனாங்களே...
நமக்குக் கக்ஷ்டம் வரும்போது இதுகள்லாம் எரிமைலயா வெடிக்கும்னு நம்பித்தானே...அந்தத் தலைவனும் அந்த இயக்கமும் அந்த மக்களும் அங்கே களத்துல நின்னாங்க...?

அயோக்கியர்களா...கழுத்த அறுத்துப்புட்டீங்களே...!

மனசாட்சின்னு ஒண்ணு ஒங்களுக்கு இல்லன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் கேக்கறேன்.

நடேசன் ஐயாவையும் மத்த அரசியல் தலைவருங்களையும் சமாதானம்னு சொல்லி சுட்டுக் கொன்னானுங்களே...

அந்த சேதி வந்த மறு நிமிசமே...

சென்னையில இருக்கிற இலங்கை தூதரகத்தை நோக்கி ஒரே ஒருத்தன் கூட போகலியே...
இந்தியாவோட சம்மதத்தின் பேர்லதான் நடேசன் ஐயாவும் மத்தவங்களும் போனாங்க...இது உங்க எல்லாருக்கும் தெரியும்.

அவங்க கொல்லப்படறதுக்கு மொதல் நாள்...அதே நடேசன் ஐயா...ஒங்க எல்லாத்துக்கும் பேசி...’ஏதாச்சும் செய்யுங்க’ன்னு கதறினாரே...!
நீங்க எதுவுமே செய்ய மாட்டீங்கன்னு தெரிஞ்ச பிறகுதானே...அவரும் மத்த தளபதிங்களும் சாவை எதிர்பார்த்தே போய்ச் சேர்ந்தாங்க!

தன் மக்கள் சாகறதைத் தடுக்கறதுக்காக...தாங்கள் செத்தாலும் பரவாயில்லன்னு போற அவங்க எங்க...?

’ஹி...ஹி...ரெண்டு சீட்டு போட்டுக் குடுத்தா...நம்ம அணியிலயே இருந்துடலாம்’னு தலையச் சொறியிற நீங்க எங்க...?

உங்க கூடல்லாம் நின்னு எங்க தலைவர் போட்டோ எடுத்தாரே...எனக்குத் தெரிஞ்சி அந்த மனுசன் வாழ்க்கையில படிஞ்ச ஒரே கறை அதுவாத்தான் இருக்கும்.

ஆனா...நீங்க புத்திசாலிங்க...அந்தப் படத்தை இங்க வந்து போட்டு பிலிம் காட்டி...அரசியல் ’பண்ணி’ பதவியும் வாங்கிட்டீங்க.

’நடேசன் மற்றும் தளபதிகளின் படுகொலையில் இந்தியாவுக்கு பங்கு இருக்குன்னு...ஒரே ஒரு இந்திய அரசு அலுவலகத்தைக் கூட நீங்க நெருங்கலையே...’

பின்ன என்ன மயித்துக்கு...நீங்கள்லாம்...அந்த தலைவன்கிட்ட நம்பிக்கைய வளர்த்தீங்க?

-இப்படி இந்தக் கழிசடைகளைக் கேள்வி கேக்க வேண்டிய நாம எல்லாம்...இந்தப் பொறுக்கிங்களுக்கு மாத்தி மாத்தி ஓட்டுப் போடறோமே...

ஏன்...?

இதுகளுக்கு இனமும் கிடையாது மொழியும் கிடையாது...!
இருக்கறது ஒண்ணே ஒண்ணு...பதவி வெறி!
அதுக்காக...
தொண்டை கிழியக் கத்தி கைத்தட்டல் வாங்கி...
‘அங்கே...ஈழத்தில் என் தம்பியின் படைகள் சிங்களக் காடையரைப் பின்னங்கால் பிடறியில் பட ஓட வைக்கின்றன’
-ன்னு புலிகளோட வீரத்துல இதுக வயிறு வளர்த்துப் பொழைப்பு நடத்தறதுக!

தேர்தல்ல நிக்கிற எந்தக் கட்சியும் எந்தத் தலைவனும் இதே மாதிரி...
தத்தாரிதான்...! மொள்ளமாரிதான்...! முடிச்சவிக்கிதான்!
தனித் தனியா சொல்ல வேண்டியதில்ல.

இப்பவும் முள்வேலிக்குள்ள இருக்கற மூணு லட்சம் மக்களைக் காப்பாத்த இந்த தேர்தல் பொறுக்கிகள் என்ன செஞ்சுக்கிட்டிருக்கு...?

சும்மா ஒரு ஆர்ப்பாட்டம்...
கூட்டம்...
மாநாடு...
இல்லன்னா இருக்கவே இருக்கு...அறிக்கை!

இது கூட எதுக்குத் தெரியுமா...?
எங்க வூட்டுக்காரரும் கச்சேரிக்குப் போறாருங்கற மாதிரி...
‘நாங்களும் கச்சி நடத்தறோம்...’னு காட்டிக்கிறதுக்குத்தான்.

ஒரு லட்சம் பேரைக் கொன்னிருக்கான்.
ஒரு இயக்கத்தையே அழிச்சிட்டோம்கறான்.
தலைவரையே கொன்னுட்டோம்கறான்.
மூணு லட்சம் மக்களை ஆடு மாட்டைவிட மோசமா அடைச்சி வச்சிருக்கான்.

இந்நேரம் தமிழ்நாடு எப்புடி இருக்கணும்?

வீதிக்கு வீதி போராட்டம் நடக்க வேணாமா?

ஏன் நடக்கலை?

நாம தேர்தல்ல மட்டுமே புரட்சி செய்யக் கத்துக்கிட்டவங்க.

நம்ம தளபதிகளும் தானைத் தலைவர்களும் மேடையில மட்டுமே புரட்சி நடத்தற வெவரமானதுக...

ஒண்ணு சொல்றேன்...

மொதல்ல இந்த ஓட்டுப் போடற பழக்கத்தை நிறுத்துங்க.

நம்மளச் சுத்தி இருக்கிற எல்லா தேர்தல் அரசியல்வாதிங்களுமே...மொள்ளமாரிங்கதான்.

ஏன்னா...தேர்தல்ங்கறதே...பணம் சுருட்டறதுக்கான ‘ஏற்பாடு’தான்.

234 எம் எல் ஏங்களும்...40 எம் பிங்களும் சேர்ந்து ‘தனி ஈழத்தை ஆதரிப்போம்’னு கொரல் கொடுத்தா கூட டில்லிக்காரன் ’ஐயோ...எனக்கு பயமா இருக்குப்பா...’ன்னு பம்மிகிட்டு தனி ஈழம் அமைக்க ஒதவி செய்ய மாட்டான்.

மொதல் வேளையா...356 ஐப் பயன்படுத்தி தமிழ்நாட்டு சட்டமன்றத்தைக் கலைப்பான். அப்புறம் 40 எம்பிங்களையும் டில்லிலேருந்து கூட்ஸ் வண்டியில மூட்ட கட்டி அனுப்புவான்.

அதனால... ‘புரட்சி’ தமிழன்...இல்ல மானத் தமிழன்...இப்படியெல்லாம் டைப் டைப்பா பேர் போட்டுக்கிட்டு யார் வந்தாலும்...அந்த புரட்சிக்காரரு...
ஓட்டுக் கேக்கற திட்டத்துல இருக்காரா...?ன்னு தெரிஞ்சுக்கங்க.

அவர் ‘நான் மட்டும்...ஆட்சி அமைத்தால்’னு பேச ஆரம்பிச்சா...நம்மகிட்ட மிச்சம் இருக்கிற மக்களையும் போராளிகளையும் காட்டிகொடுத்து காசு பார்க்குற ஆளுன்னு முடிவு செஞ்சு அந்த ’புரட்சி’ய பொரட்டி எடுத்து தொரத்துங்க.

இல்ல...இல்ல...இவரு ரொம்ப நல்லவருன்னு நீங்க நம்பினா...அது உங்க சோத்துல மண்ணை அள்ளிப் போடப் போறதில்ல. ஒரு இனத்தோட கருவை அழிக்கப் போவுது.

ஆமா சாமி...நான் பெரிசா படிச்சதில்ல...

இருந்தாலும் சொல்றேன்...’
எந்த அரசியலைத் தேர்ந்தெடுக்கறதுங்கற உரிமை ஒருத்தரோட சொந்த விசயம்தான். ஆனா...அதோட விளைவுகள் சமூகத்தை பாதிக்கும்’ன்னு எப்பவோ படிச்ச ஞாபகம்.

’உங்கள் ஓட்டு அருமை அண்ணன் பிடல் காஸ்ட்ரோவுக்கே...’
’போடுங்கம்மா ஓட்டு சே குவாராவைப் பார்த்து’
’பனை மரத்துல வௌவாலா...லெனினுக்கே சவாலா?’

-இப்புடியெல்லாம் ஓட்டுக் கேட்டா...மேற்படி தலைவருங்க அவங்க நாட்டுங்கள்ல புரட்சி செஞ்சாங்க...?

யோசிச்சுப் பாருங்க...!

உரிமையுடன்,

இதுவரை எந்த மொள்ளமாரிக்கும் வாக்குப் பிச்சை போடாத
பட்டிக்காட்டான்

Friday, October 9, 2009

குவார்ட்டர் + பிரியாணி+ கவர் =பத்திரிகையாளர்!

கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் கெழவியத் தூக்கி மனையில வைன்னானாம்...
இது எங்க ஊரு பழமொழி.

அவனவன் திங்கறதுக்கு சோறு இல்லாம முகாம்ல சாகறான். மலையாள நாதாரிங்க முல்லைப் பெரியாறுல ஆப்பு வைக்குதுங்க. மீன் புடிக்கப் போறவன் கருவாடா திரும்பறான். வன்னி முகாம்ல என் அக்கா தங்கச்சிக சிங்கள பன்னிக் கூட்டத்துக்கிட்ட சிக்கி சின்னா பின்னமாகுது. தமிழ்நாட்டுல ஒரு கிலோ கத்திரிக்காய் 22 ரூவா விக்குது. அரிசி 42 ரூவா ஆயிடுச்சி. ஒரு ரூவா அரிசிய வாங்கித் தின்னா வேளைக்குப் பத்து ரூவாய்ய்க்கு வயித்து வலி மாத்திரை திங்க வேண்டியிருக்கு.

தினமலர் பரதேசிக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையாவே தெரியலையாம். எந்த சினிமா நடிகை ’தொழில்’ நடத்தறாங்கன்னு பட்டியல் போடுது. நடிகர் சங்கம் இதைக் கண்டிச்சு கூட்டம் போடுது. சின்னக் கலைவாணர்னு நம்மள மாதிரி நாலு இளிச்ச வாயங்க நம்பிக்கிட்டிருந்த தேவர் சாதி வெறி பிடிச்ச விவேக் அந்தக் கூட்டத்துல ’பத்திரிகைக்காரன்லாம் குவார்ட்டர் சாராயத்துக்கும் பிரியாணிக்கும் அலையறவனுக...பத்திரைகையில எழுதினவனோட அக்கா ஆத்தா போட்டோ குடுங்க...கிராபிக்ஸ் பண்ணி அவளுகளும் தே....ன்னு விளம்பரம் கொடுப்போம்’ ....இப்பிடியெல்லாம் காமெடி பண்ணியிருக்கு.

இப்ப பத்திரிக்கையாளரகள் (என கௌரவமாக தங்களை அழைத்துக்கொள்ளும் சதை புரோக்கர்கள்) ஆஹா...எங்க இனத்துக்குக் கேவலம்னு கிளம்பிட்டாய்ங்க.

நான் தெரியாமத்தான் கேக்கறேன்.
விவேக் சொன்ன, குவார்ட்டர் + பிரியாணி விசயத்துல என்ன தவறு? கருத்து சொல்ற அளவுக்கு விவேக் பெரிய பருப்பா இல்லாம இருக்கலாம். ஆனா...இந்த சதை புரோக்கர்கள் குவார்ட்டர் + பிரியாணி கொடுத்தால் ‘ஐயோ...யார்கிட்ட என்ன கொடுக்கறீங்க...? நாங்கள்லாம் சுத்த நேர்மைக்குப் பொறந்தவங்க’ன்னு மறுக்கிற ஜாதியா?

இப்பல்லாம் ப்ரஸ் மீட் வச்சாலே டாஸ்மாக்குக்கும் தலப்பாக்கட்டு கடைக்கும் மொய் வச்சே தீர வேண்டியிருக்கே. இது போதாதுன்னு நம்ம துரைங்க கிளம்பும்போது சும்மா ஜெண்டிலா ‘ம்ம்ம்...பாத்துக்கலாம்...மேட்டர் வந்துரும்...அப்பறம்...அவ்ளோதானா?’ன்னு காசு புடுங்க பேசுற பேச்சு இருக்கே...யப்பா...அந்த நிமிசத்துலதான் சரஸ்வதி தேவியும் தர்ம தேவனும் நமக்கு தரிசனம் தருவாங்க.

நடிகைங்க உடம்பக் காட்டி காசு பாக்கராங்கதான். யார் இல்லன்னது? ஆனா அதுக்குப் பேரு விபசாரம்னா...அட ங்கொய்யால...நடிகைங்க தொப்புளையும் தொடையையும் கலர் கலரா போட்டு காசு சம்பாதிக்கிறியே...உன் தொழிலுக்கு என்னா பேரு...?


மீடியா...!
ப்ரஸ்...!
நான்காம் தூண்!
-நல்லா வாயில வருது.

இதுல ஒரு பெரிய வித்தியசம் இருக்கு. நடிகைங்க தங்களோட ஒடம்பக் காட்டி...மானம் மரியாதய விட்டுக் காசு சேக்குதுங்க...! இது நியாயம் இல்லதான். ஆனாலும் அவங்க ஒடம்பு அவங்க காட்ட்றாங்கன்னு ஒரு மொக்கையாவாவது நியாம் பேசிக்கலாம்.

ஆனா...இந்த சதை புரோக்கருங்க...அடுத்த பொம்பளைங்க ஒடம்பக் காட்டற படத்த ஓசியில வாங்கிப் போட்டு...பொழைக்குதுங்க. இது எப்படி இருக்கு?
அதாவது...நடிகைங்க விபசாரம் செய்யறாங்கன்னா...
பத்திரிகைக்காரதுங்கதான் அந்த நடிகைங்களுக்கு மாமா வேலை பாக்குதுங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் ஒடம்ப விக்கற பொம்பளைங்களை விட...அந்த ஒடம்புக்கு புரோக்கர் வேலை பாக்கற மாமாக்கள்தான் கேவலமான பிறவிங்க.

ஆனா...இந்த புரோக்கருங்களுக்குத்தான் சமூகத்துல பெரிய மரியாத.

சரக்கடிச்சிட்டு பைக் ஓட்டும்போது போலீஸ் புடிச்சா...’சார் நான் ப்ரஸ் சார்...என்ன என்னையே புடிக்கிறீங்க...?’ன்னு கேக்கறது.

ரயில்ல டிக்கெட் பதிவு செய்யப் போனா...’சார்...நான் மீடியா பர்சன்...’ன்னு பந்தா பண்ணி சீட்டு வாங்கறது.

நாலு நடிகைங்க படங்களை போட்டு...’இவங்கெல்லாம் விபசாரம் பண்றாங்கன்னு’ செய்தி போட்டதுக்காக...தினமலர் பரதேசி மேல நடிகர் சங்கம் புகார் கொடுத்துச்சு. நியாயமா என்ன செஞ்சிருக்கணும்?

அவதூறு பரப்பினதுக்காக தினமலர் பொறுப்பாசிரியர் ரமேக்ஷ்சைத் தூக்கி உள்ளே போட்டிருக்கணும். ஆனா...லெனின்னு ஒரு உதவி ஆசிரியரைக் கைது பண்ணிச்சி நம்ம போலீசு.

போறாளாம் பொன்னாத்தா...எம்மேல வந்து ஏறாத்தாங்கற கதையா...இந்த விசயத்துல இரு உதவி ஆசிரியர் என்ன செய்ய முடியும்?
சட்டப்படியும் நியாயப்படியும் பொறுப்பாசிரியரைத்தானே கைது பண்ணணும்?
ரமேக்ஷ் மேல கை வைக்கக் கருணாநிதிக்கு அவ்ளோ அச்சமா?

சரி...லெனினைக் கைது செஞ்சாச்சு.

பத்திரிகையாளர்கள்னு சொல்லிக்கிட்டிருக்கிற பல இதுகள்...கடந்த ரெண்டு நாளா தமிழ்நாடு முழுக்க போராட்டம் நடத்திக்கிட்டிருக்குக.
லெனினைக் கைது செஞ்சது தப்பாம்.
அப்ப...? அவனுக எழுதினது மட்டும் ரைட்டா...?
கேட்டா...இதெல்லாம் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கையாம்!
அரசின் அடக்குமுறையாம்!

ஆஹா...ஆஹா...இதுகளுக்குத்தான் கருத்துச் சுதந்திரத்து மேல என்னா அக்கறை...?

மரியாத கெட்ட பத்திரிகை உலக மாமாக்களே...

திசைநாயகம்னு ஒரு பத்திரிகையாளர் பேரைக் கேள்விப்பட்டிருக்கீகளா..?
சிங்கள அரசின் போர் வெறிக் கொள்கையைக் கண்டிச்சு எழுதினதுக்காக...ராஜபக்சேவால கைது செய்யப்பட்டு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிங்கம் போல் உள்ளே இருப்பவர்!

அவர் பேசினது கருத்து!
அதுக்கு சுதந்திரம் இல்லங்கறது அடக்குமுறை!
இன்னும் சொல்லப் போனா...அவர் மனுசன்!

நீங்கள்லாம் ஒட்டுண்னிங்க...!
ஆட்சியில இருக்கறவங்க...அதிகாரத்துல இருக்கரவங்க...போலீசுக்காரங்க கூட சேர்ந்துக்கிட்டு பீறாய்ஞ்சு...காசு சேத்துக்கிட்டு ஒடம்பு வளர்க்குற ஒட்டுண்ணிங்க!

நீங்க மொதல்ல அரசாங்கத்தை எதிர்க்கத் துப்பு இல்லாதவங்க.

அட...அவ்வளவு ஏன்....?

எந்தப் பத்திரிகை ஆபீஸ்ல பத்திரிகையாளருங்க ‘ஒண்ணா’ சேர்ந்து சங்கம் வைச்சிருகீங்க?
கட்ட வண்டி இழுக்கறவ தொழிலாளி, ஆட்டோ ஓட்டுறவங்க, மூட்ட தூக்கறவங்க கூட சங்கம் வச்சிதான் போராடறாங்க.
நீங்க பேப்பர் கிழிய குமுறிக் குமுறி எழுதறீங்களே...உங்களுக்குன்னு ஒரு ஆபீசுல கூட சங்கம் வச்சுக்க வக்கில்லையே...ஏன்னு சொல்லவா?

நீங்கல்லாம் கடைஞ்செடுத்த சுயநலமிங்க...எல்லாத்துக்கும் மேல...நீங்கள்லாம் முதுகெலும்பு இல்லாத கோழைங்க! உங்களால பத்துப் பேரோட ஒத்துப் போக முடியாது. உங்களால உங்க முதலாளிங்ககிட்ட ஒரே ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச முடியாது!

அட...விபசாரம் பண்ற பொம்பளைங்க கூட ’பாலியல் தொழிலாளிகள்’ பேர் போட்டு சங்கம் வச்சிருக்காங்க...!

ஆனா...நீங்க...ஊர் ஒலகத்துல இருக்கிற உரிமைப் பிரச்சினைங்களையெல்லாம் எழுதுவீங்க. உங்க ஆபீசுல அடிமையா பம்முவீங்க!

இந்த லட்சணத்துல இருந்துக்கிட்டு ’பத்திரிகையாளர்கள் சங்கம்’னு ஒண்ணை ஆபீசுக்கு வெளில வச்சிருக்கீங்களே. யாரை ஏமாத்த?

ஏன்யா...ஒரு மன்னார் அன் கம்பெனியில வேலை பாக்க்குறவன் மன்னார் அன் கம்பெனி யூனியன்ல இருப்பானா...? இல்ல...தனியாப் போயி ’பல கம்பெனி பரதேசிகள் சங்கம்’னு ஒண்ணு ஆரம்பிச்சு அதுல இருப்பானா...?

பதில் சொல்லுங்க ’உரிமைக் காவலர்களே..’

இந்த நாட்டுல,,,போலீசு, பத்திரிகைக்காரதுக...இந்த ரெண்டு பேருக்கும் சங்கம் வச்சிக்கிற உரிமை இல்ல.

போலீசும் நீங்களும் சம்பாதிக்கிற விதமும் ஒண்ணுதானே!

சங்கத்தைப் பத்தி ஏன் கேக்கறேன்னா...
உங்களுக்குன்னு ஒரு சங்கம் இருந்தா...லெனின் கைது செய்யப்பட்ட அடுத்த நிமிசமே...தினமலர் ஆபீசுல வேலை நிறுத்தம் செஞ்சி...’பொறுப்பாசிரியர் செஞ்ச தப்புக்கு...உதவி ஆசிரியர் பலியாகணுமா?ன்னு கோசம் போட்டிருக்கலாமே!

அதானே முறை?

அட...எக்ஸ்போர்ட் கம்பெனியில பனியன் நூல் பிரிஞ்சிருக்குன்னு கட்டரை சஸ்பெண்ட் பண்ணினா...தொழிலாளிங்கல்லாம் வாசலுக்குப் போயி...’சூப்பர்வைசர் என்ன புடுங்க்கிட்டா இருந்தான்...அவனை சஸ்பெண்ட் பண்ணுடா’ன்னு இந்நேரம் ஸ்ட்ரைக் பண்ணியிருப்பாங்க!

ஆனா...உங்களுக்கு அந்த துப்பில்லை! ஏன்னா நீங்கள்லாம் தினமும் வீட்லேருந்து கிளம்பும்போதே மானத்தை கக்கூஸ்லயும் மரியாதைய செருப்பு ஸ்டாண்டிலயும் வச்சுட்டுத்தான் ஆபீஸ் போறீங்க!

ஆக மொத்ததுல...
சினிமா, அரசியல், கட்டப் பஞ்சாயத்து...ன்னு மாமா வேலை பார்த்துப் பொழைக்கற ஜென்மமா வாழற உங்களுக்கு...எந்த நடிகை என்ன ‘தொழில்’ செஞ்சா என்னா...?
இதுதான் கேள்வி.

இதோட சில கொசுறுக் கேள்விங்களும் இருக்கு.

1. எந்தெந்த நடிகருங்க (ஹீரோக்கள்) விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு...இதே மாதிரி போட்டோவோட செய்தி போட முடியுமா?
2. எந்தெந்த தலைவருங்க விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு போட்டோவோட செய்தி போட முடியுமா?
3. எந்தெந்த பத்திரிகை ‘அதிபர்கள்’ விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு போட்டோவோட செய்தி போட முடியுமா?
இந்தக் கேள்விக்கெல்லாம் உங்களால பதில் சொல்ல முடியாதுன்னு எனக்குத் தெரியும்.

கடைசியா...இந்தக் கேள்வியையும் கேட்டுடறேன்.

மரியா மக்தலீனா..ங்கற பொண்ணு விபசாரம் செய்யுதுன்னு ஊரே திரண்டு அடிச்சப்ப...ஏசு சொன்ன வாசகம் இது:

‘உங்களில் எவரொருவர் கள்ளமில்லாதவரோ...அவர் இந்தப் பெண் மீது கல் எறியலாம்!’

இப்ப சொல்லுங்க...
உங்களில் எவர் கள்ளமில்லாதவர்?

Thursday, October 8, 2009

முகாம்களில்… ஒரு வேளை சாப்பாட்டுக்கு 3 ரூவா…! வந்தாரை வா.......ழ வைக்கும் தமிழகம்!

ழ உறவுகள் தமிழகத்தில் அகதிகள்எனும் அவமானகரமான பெயரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று தம் குடும்பக் காவலர் கருணாநிதி அண்ணா விழாவில் தி.மு.கவின் சார்பாக தீர்மானம் இயற்றியிருக்கிறார்.

தம் குடும்பக் காவலர் கருணாநிதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழ மக்களை எவ்வளவு கௌரவமாக நடத்துகிறார் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
இதை மட்டும் நீங்கள் தெரிந்துகொண்டால்...அட போய்யா வெண்ட்ரு குடியுரிமையாவது கும்மாங்காவதுஎன்று கடுப்பாவது சாமி சத்தியம்.

முகாம்களில் உள்ள மக்களுக்கு அரசு போடும் பிச்சைக்கு பணக்கொடைஎன்று பெயர். இந்த பணக்கொடைப் பட்டியல் இதோ:


வ.எண்

குடும்ப உறுப்பினர்

பணக்கொடை

(மாதம் ஒன்றுக்கு)

1

குடும்பத்தலைவருக்கு

ரூ.400

2

அடுத்த பெரியவர்கள்

ரூ.288

3.

முதல் குழந்தை (12 வயதுக்குக் கீழ்)

ரூ. 180

4.

அடுத்த குழந்தைகள்

ரூ. 90

(அரசாணை எண் 755, பொது (ம.வா) நாள் 31-07-2006)

எப்படி எங்கள் தாராள மனது?

பெரியவர் என்றால் வயதானவர். வயதானவர்கள்தானே பல்வீனமாக இருப்பார்கள். அதுவும் போர் நடந்த மண்ணில் இருந்து வந்தவர்கள். பல்வேறு உடல் குறைபாடுகளுடன் இருப்பார்கள். அவர்களுக்கு மாதம் 288ரூபாய் ‘கொடை’. அப்படியானால் ஒரு நாளைக்கு 9 ரூபாய் 60காசு. ஒரு வேளைக்கு 3ரூபாய் 20 காசு

ஒரு குழந்தைக்கு இதே கணக்கின்படி ஒரு வேளைக்குக் கிடைக்கும்கொடை’ 1 ரூபாய்! . அடேங்கப்பா...இவ்ளோ காசை வச்சுக்கிட்டு இந்த அகதிங்கள்லாம் என்னதான் பண்ணுறாங்களோ என்று பொறாமையாக இருக்குமே!

மச்சி வீடு கட்டி வேலிக் கணக்குல வெள்ளாமை விட்டு, வீடு முழுசும் சொந்த பந்தங்களை வச்சு வித விதமா சமைச்சுப் போட்டு அதுக சிரிக்கறதப் பார்த்து தானும் சந்தோசப்பட்ட இனம் இது!

மனசாட்சி மண்ணாங்கட்டியெல்லாம் வேணாம்...தயவு செய்து உங்கள் பார்வையில் படும் எந்தப் பிச்சைக்காரரையும் கேட்டுப் பாருங்கள். அவர் இதை விடப் பல மடங்கு அதிகமாகவே சம்பாதிக்கிறார்!

சார் கவர்மெண்ட்...அதுங்களுக்கு மானிய விலையில் அரிசி தருது... ஆக்சுவலா அதுங்களுக்குப் பெரிய செலவே இல்ல சார்

என்று சிக்கன் சூப் உறிஞ்சிக் கொண்டே ஊர் நியாயம் பேசும் மிடில் க்ளாஸ் மன்னர்களுக்கு ஒரு தகவல்!

மானிய விலையில் தரப்படும் அரிசியைப் பற்றிய பட்டியல் இதோ:

வ.எண்

குடும்ப உறுப்பினர்

வயது

அரிசியின் அளவு

1

பெரியவர்

8 வயதுக்கு மேல்

தினசரி 400 கிராம்

2

சிறியவர்

8 வயதுக்கு கீழ்

தினசரி 200 கிராம்

(மைய அரசு கடித எண்.1 (26) /83-RH/1 தொழிலாளர் மற்றும் மறுவாழ்வு அமைச்சகம் நாள் 19.12.1983)

அதாவது... எட்டு வயது முடிந்து ஒரு நாள் ஆனாலும்...20 வயது ஆனாலும்...40 வயது ஆனாலும்...80 வயது ஆனாலும் அவர்கள் ஒரு நாளைக்கு 400 கிராம் அரிசிதான் சாப்பிட வேண்டும்!

கசாப்புக் கடைக்குப் போற ஆடு கூட சரியா தீனி தின்னுச்சா...முறையா பராமரிக்கப்படுதான்னு பார்க்க அரசாங்க அதிகாரிங்க கசாப்பு வளாகங்கள்ல சோதனை நடத்தறாங்க தெரியுமா நண்பர்களே!

இதெல்லாம் கூட பரவாயில்லை என்று நினைக்க வைக்கும் அடுத்த தகவலைப் பாருங்கள்.

‘அகதிகளின் இறப்பின்போது இறுதிச் சடங்கிற்கு ரூ 100/ எரியூட்டும் அல்லது ஈமக்கிரியை செலவாக அரசால் வழங்கப்படுகிறது (அரசாணை எண்.49532/ம.வா.1/05-1, பொதுத்துறை நாள் 10.12.2006)

ஒரு மாலை வாங்க முடியுமா?

ஒரே ஒரு மூங்கில் கழி?

ஒரே ஒரு கோடித் துணி?

பாடை கட்ட கயிறு?

எரிக்கும் தொழிலாளி கூட 100 ரூபாய்க்கு வேலை செய்ய மாட்டாரே...!

அடத் தூ...இதெல்லாம் ஒரு அரசாங்கம்...இதுக்கு ஒரு அரசாணை...! மானங்கெட்டதுகளா...!

மூன்று வேளை சாப்பாடு போட வக்கில்லை. செத்தால் கூட பிணத்தை எரிக்கக் காசு கொடுக்கத் துப்பில்லை. இந்த லட்சணத்தில் இந்த அரசாங்கம் இவர்களுக்குக் குடியுரிமை வாங்கிக் கொடுக்குமாம். அதை நாம் வேடிக்கை பார்த்துக் கை தட்டுவோமாம்!

துப்பு கெட்ட நாய்களே...

நீங்க குடியுரிமை வாங்கித் தர்றது இருக்கட்டும். முதலில்...எங்க மக்கள் மூணு வேளை சோறு திங்கறதுக்கு வழி பண்ணுங்க!

Tuesday, October 6, 2009

மக்கள் தொலைக்காட்சிக்கு ஒரு சிறப்பு விருந்து!

சென்னையில் வந்தேறியுள்ள இலங்கைத் துணைத் தூதர் வடிவேல் கிருக்ஷ்ணமூர்த்தியை ஏசும் உணர்வாளர்கள் மற்றும் தலைவர்கள் பார்வைக்கு இந்தக் கட்டுரை சென்றால் நன்று.

வடிவேல் கிருக்ஷ்ணமூர்த்தி, ராஜபக்சேவின் அள்ளக்கை என்பதும் தமிழர்களை கேனையர்கள் என்றுதான் நினைக்கிறான் என்பதும் ஊரறிந்த உண்மைகள். கடந்த வாரம் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த அள்ளக்கை நிறைய திமிர்ப் பேச்சுகளை உதிர்த்தான்.

‘வன்னி முகாம்கள் மிருகக் காட்சி சாலைகள் அல்ல’
‘மீனவர்களை இலங்கைக் கடற்படை கொல்வதாகச் சொல்வது பொய!’
’இந்தியா இலங்கை எனப் பிரித்துப் பார்க்காதீர்கள். நாமெல்லாம் தெற்காசியர்கள்’

- ’இறையாண்மை’ இருப்பதாக கூப்பாடு போடும் இந்திய தேசிய பக்தர்கள் இந்த அத்துமீறிய பேச்சுகளைக் கண்டும் காணாதது போல் பம்முகிறார்கள்.

அள்ளக்கை வடிவேல் கூறிய இந்த கருத்துகள் அனைத்துமே இந்தியாவின் மூஞ்சியில் கொழும்பு ஸ்பெசல் அடுப்புக் கரியைப் பூசுபவைதானே! வன்னி முகாம்கள் குறித்து இந்திய அரசு திருவாய் திறக்கத் தொடங்கிய சில நாட்களில்...
இவன் இப்படிப் பேசியுள்ளான். மேலும்...இந்தியாவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் குழு வன்னி முகாம்களைப் பார்வையிடச் செல்லும் திட்டம் பரிசீலிக்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்த பிறகுதான் வடிவேல் இப்படி நக்கல் செய்தான்.

ஆக...எவனைப் பார்த்து ‘எருமை மாடு’ என்று சொன்னானோ...அவன் காதில் வாங்காதது மாதிரி சமாளிக்கிறான். தமிழகத் தலைவர்கள் சிலர் தங்களுக்கு சூடு, சொரணை கொஞ்ச நஞ்சம் இருப்பதால்...இந்த கிண்டலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

இப்போது...என் கேள்விக்கு வருகிறேன்.

‘நான், முகாம்களை மிருகக் காட்சி சாலை என்று சொல்லவே இல்லை’
என்று அள்ளக்கை இப்போது பல்டி அடிக்கிறான்.
அவன் கொடுத்த விருந்தில் தட்டுகளை நக்கிய ’பத்திரிகையாளர்கள’் (சீக்கிரம் இதுக்குப் பொருத்தமான வேற வார்த்தையக் கண்டுபிடிக்கணும்பா)
அவனது இந்த மறுப்பையும் செய்தியாக வெளியிட்டு...நக்கிய நன்றிக் கடனைத் தீர்த்துக் கொண்டுள்ளனர்.

’அது எப்படி மறுக்கலாம்? அப்ப நாங்க எழுதினது பொய்யா?’-என எந்த உண்மை விளம்பியும் கேட்கவே இல்லை.

எங்கள் தானைத் தலைவர் டாக்டர் அண்ணா பட்டம் புகழ் கலைஞர் தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் (ஸ்...ப்பா இப்பவே கண்ணக் கட்டுதே...) மாண்புமிகு முதல்வர் கலைஞர் கருணாநிதி கூட ‘மீனவர்கள் தாக்கப்படுவது’ பற்றி மத்திய அரசுக்கு (வழக்கம்போல) கடிதம் எழுதியுள்ளாரே!

அள்ளக்கை வடிவேல் சொல்வதைப் பார்த்தால்...எங்கள் தானைத் (மறுபடியும் மொதல்லேருந்தா...?) தலைவர் சொன்னதே பொய் என்று ஆகிவிடாதா?

மிக மிக முக்கியமாக இந்த ‘மறுப்பு’ச் செய்தியை விலாவாரியாக ஒளிபரப்பியதே
கலைஞர் தொலைக்காட்சிதான்!

அந்த அள்ளக் கையின் நேர்காணலைப் படம் பிடித்த தொலைக் காட்சிக்காரர்களிடம் ஆதாரம் இருக்கிறதே...அவர்கள் அதை ஒளிபரப்பி
தங்கள் நேர்மையை நிறுவலாமே!

முதல்வரே பொய் சொல்கிறார் என்பதுதான் வடிவேலுவின் குற்றச்சாட்டு. இதற்கு மறுப்பு சொல்லும் வக்கில்லாம்ல் ‘அவன் என் குடும்பததைப் பத்தி ரொம்ப கேவலமாப் பேசுவான்...நானும் அவ்னும் ஃபிரண்ட்சு’ என்று தனது தொலைக்காடிச்யிலேயே தனக்கே மறுப்பு வெளியிட்ட முதல் பெருமை எங்கள் தானைத தலை...................க்கே உண்டு.

அட...நம்ம மக்கள் தொலைக்காட்சிக்கு என்ன ஆச்சு?
அவர்களிடம் வடிவேலுவின் நேர்காணல் இருக்கிறதே!

ஆக மொத்தம்...நமது பெருமை மிகு தேசத்தில்...விருந்து, மருந்து இரண்டையும் ‘கூட்டி’க் கொடுத்தால்...பெத்தவளைக் கூட காட்டிக் கொடுக்க மாட்டார்கள்!
’யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ள வை!’
என்ற பழமொழி நம் ஊடக யோக்கியர்களுக்குப் பொருந்தும்.

இப்போதும் ஒன்றும் மோசமில்லை.
வடிவேலு பேசிய விவரங்களை மக்கள் தொலைக்காட்சியாவது அப்படியே ஒளிபரப்பலாம். ஒருவேளை...இன்னும் விருந்தில் நனைந்த கையே காயவில்லையே என்று சங்கடப்பட்டால்...
ஆளுக்குக் கொஞ்சம் பிச்சை எடுத்து நாங்கள் ஒரு விருந்து வைக்கிறோம்.
அந்த நன்றிக்குக் கடனடைப்பதாக...அந்த நேர்காணல் பதிவை எங்களுக்குக் கொடுக்கட்டும்.
அப்புறம் நாங்கள் வைக்கிறோம் அவனுக்குக் கச்சேரி!