Tuesday, April 6, 2010

கமல் அள்ளக்கைகளுக்கு சேரியிலிருந்து ஒரு கடுதாசி!

கமல் அள்ளக்கைகளுக்கு சேரியிலிருந்து ஒரு கடிதம்...
இல்லல்ல லெட்டர்...
வேணாம் கடுதாசின்னே வச்சுக்கலாம்!

எங்க ஊர்ல ராகவன் ராகவன்னு ஒருத்தன் இருந்தான். அவந்தான் எங்க ஊருக்கு கிரிக்கெட்ட அறிமுகப்படுத்துனான். அதாவது, ஒங்க கமலு, மொத மொதன்னு ஈரோயினி வாயில முத்தம் குடுக்கறத அறிமுகப்படுத்துனாரே...அதே மாதிரி...
அட...எருமை மாடே...மகாநதியில ஒரு எடிட்டிங்கை அறிமுகப்படுத்தினாரே ...அதச் சொல்ல வக்கில்ல...?ன்னு கோச்சுக்காதீக அள்ளக் கைகளா...!
எந்தப் புது அறிமுகமும் தொடர்ந்து பயன்படணும்...உங்க ஆளு கொண்டாந்த எடிட்டிங் இப்ப என்னா ஆச்சு...?
மகாநதிக்கு முன்னாலயும் படம் வந்துச்சு...பின்னாலயும் படம் வருது...அந்த எடிட்டிங்க்...? ஒங்காளுக்குத்தான் அதோட தலையெழுத்து என்னான்னு தெரியும்.
அதேமாதிரிதான்...மும்பை எக்ஸ்பிரஸ்ல...டிஜிடல் கேமரா சிஸ்டம் கொண்டாந்தாரு உங்காளு...
தியேட்டர்ல் ஒக்காந்து முறுக்கு தின்னவன் பூரா...’த்தா...என்னாடா...தியேட்டர்லயும் லைய்ட்ட ஆப் பண்ணிட்டீங்க...தெரையிலயும் லைட்ட ஆப் பண்ணிட்டீங்க...?ன்னு கத்துனான். அந்தச் சத்தம் ஒங்காளு காதுல் வுழுந்துருக்காது. அவரு அந்த நேரத்துல...அடுத்த கண்டுபிடிப்புல மூழ்ழ்ழ்ழ்ழ்கி இருந்திருப்பாரு.

ஆனா பாருங்க...இந்த வாயில முத்தம் குடுத்து...ஒதட்ட இழுத்து ஜவ்வு முட்ட்டாய் மாதிரி உடற கலைய உங்காளு கண்டுபுடிச்சி...அது இன்னிக்கு...சிம்பு வரைக்கும் யூஸ் ஆகுது...
உண்மையில...இதாம்பா கண்டுபிடிப்பு...!

சரி...நம்ம ராகவன் இருக்கானே...அவன் அடிக்கடி என்னா சொல்வான் தெரியுமா?
’மொதல்ல கிரிக்கெட்ட கிரிக்கெட்டா ஆடக் கத்துக்கணும் தம்பி...’ –ம்பான்.
அவன் கிரிக்கெட் பொஸ்தவம்லாம் வச்சுப் படிச்சு வெளாடுவான். நான் பிறவியிலயே ப்ளேயரு. எனக்கு பொஸ்தவம் தேவப்படல. ஆனா...நான் பேட்டைச் சுத்தி சுத்தி சிக்சு போரூன்னு அடிச்ச்சா...ராகவன் கடுப்பாவான். ’டேய்...கம்மானாட்டி...இது கிரிக்கெட்டு இல்லடா...என்னமோ டோபி...ஆத்துல துணி வெளுக்கற மாதிரி பேட்ட வீசற...?’ம்பான். கடசியில...நான் கிரிக்கெட்டே வெளாடறதில்லன்னு ஆகிப்போச்சு. ராகவனைப் பத்தி நான் கொறை சொன்னா...அவனோட அள்ளக் கைங்க எம்மேல வுழுந்து பிறாண்டுவாய்ங்க.

‘டேய்...பட்டிக்காட்ட்டுப் பன்னி...ராகவன் அண்ணனைப் பத்தி என்னாடா தெரியும்? அவருதாண்டா...கிரிக்கெட்டு வெளையாட்டுல ஒலக நாயகன்...ப்மாங்க’
நான் சொம்மா இருக்காம, ‘அப்புடீன்னா...இந்த டெண்டுல்கரு...ஸ்டீவ் வாக்லாம்...என்னாடா செவ்வாய் கெரக நாயகனுகளா?’ம்பேன்.
இப்ப..ஒங்க கமலகாசரை நீங்க ஒலக நாயகருங்கறீங்க. ‘இந்த அல் பேசினோ, பிராட் பிட், டி காப்ரியோ, டென்சில் வாக்ஷிங்க்டன், கெவின் காஸ்ட்னர், கெவின் ஸ்பேசி, மெல் ப்ரூக்ஸ், மெல் கிப்சன், டாம் ஹேங்ஸ், வில் ஸ்மித்....இப்புடீ போவுதே லிஸ்ட்டு...இவங்கள்லாம் எந்த கெரக நாயகனுங்க?
லைஃப் ஈஸ் பியீட்டிபுல் படத்துல நடிச்ச ரொபர்டோ பெஞ்சினி...யெல்லாம் எந்த கெரகம்...?
அட...என்னாத்துக்கு அம்புட்டு தூரம்...?
இந்த ஆயிரத்தில் ஒருவன்ல நடிச்ச கார்த்தி...பிதாமகன் சூர்யா....காசி...விக்ரம்...இவங்கள்லாம்...விண்கலத்துல ஏறி அவதார் மாதிரி ஏதாச்சும் ஒரு கெரகத்துக்குப் போயி கூத்தாடிப் பொழைச்சுக்கணுமா...? இவங்களும் நாயகனுங்கதான் அள்ளக் கைககளா...

பட்டம் போட்டுக்கறதுக்கு முன்னால...கொஞ்சம் கூச்சப்படணும்....
எங்க ஊர்ல...வட்டச் செயலாளர் ஒருத்தரு அவரு மவன் (4 வயசு) பொறந்த நாளைக்கு கெடா வெட்டி சோறு போட்டாரு...வெளம்பரத்துல...
’இந்தியாவின் இளைய மகாத்மாவே...’ன்னு ப்ளக்சு அடிச்சாய்ங்க...
வட்டத்துக்குத்தான் 40 வயசு ஆச்சேன்னு இளைய மகாத்மாவா அவரு?ன்னு விசாரிச்சா...அது அவரு மவனுக்குக் கொடுத்த பட்டமாம்.
இதுக்கும்...ஒங்காளோட ஒலக நாயகன் பட்டத்துக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிங்க பார்க்கலாம். சொம்மா உதார் வுட்டுக்கிட்டுத் திரியறதே பொழைப்பாப் போச்சி.
தமிழ் சினிமா...எங்கயோ போயிடுச்சி...அள்ளக் கைகளா...
அழகி, கற்றது தமிழ், அங்காடித் தெரு, வெண்ணிலா கபடிக்குழு, பசங்க, 23ஆம் புலிகேசி, பேராண்மை...ன்னு எங்காளுக...பின்னிப் பெடல் எடுத்துக்கிட்டிருக்காய்ங்க.
ஒங்காளு...புது மேக்கப் மேன் தேடி அலையறாரு.

ஒங்காளு மனசு பூரா...சாதி ஆதிக்கமும்...பெண்கள் மேல வக்கிரமும்தான் கொட்டிக்கெடக்கு. இது ஊரறிஞ்ச சேதிதானே... இதச் சொன்னா ஒங்களுக்குக் கோவம்கூட வருமா...? பார்றா...!

ஒங்க கமலகாசரும் எங்க கிரிக்கெட்டு ராகவன் மாதிரித்தான்னு எனக்கு அடிக்கடித் தோணும்...ஏன்னா...’சினிமாவ சினிமாவா பாருங்க’-ன்னு அடிக்கடி அட்வைஸ் பன்றாரு. அவரு கூட தேவலாம். அவரோட அள்ளக் கைகளான ஒங்க இம்சை தாங்க முடியலடா சாமீ.

’காட்சி’ன்னு ஒரு வலைத்தளம், அதுல கற்றது தமிழ் இயக்குனர் ராம் நிறைய எழுதறாரு. அவரோட உதவி இயக்குனர் மாரிச் செல்வம்னு ஒரு பயபுள்ள, கமலகாசரைப் பத்தி கொஞ்சூண்டு உண்மைகளை எழுதிடுச்சு.( http://kaattchi.blogspot.com/2010/03/blog-post_21.html) கொளம்பிட்டாய்ங்கய்யா...கமலு அள்ளக்கைககள் எல்லாம். ‘ஏய்...நீ. என்னா இவனா? அவனா...?ன்னு’
கமல் படத்துல சாதி ஆதிக்கப் புத்தி இருக்கு’ன்னு மாரிச் செல்வம் சொல்றாப்ல. இதச் சொல்ல மாரிச் செல்வம்தான் வரணுமா? உலகத்துக்கே தெரியும். ஆனா...நாம யாரு?
அண்ணாந்து பார்த்தா மேகம் தெரியும். ஆனாலும், சன் டிவியில...மோனிகா பாப்பாவும், வானிலை ஆய்வு ரமணனும் ’மழை வந்தாலும் வரலாம்...வரலைன்னாலும் போகலாம்’னு சொன்னாத்தானே தெளிவடைவோம்.
அப்புடி, ஒரு பெரச்சனைதான் இது.

’போற்றிப் பாடடி பெண்ணே...தேவர் காலடி மண்ணே’...ன்னு பாட்டப் போட்ட கமலுக்கு சாதி வெறி இல்லையாம்.ஆனா... ’ஏண்டா இப்புடி ஒரு சாதிய தூக்கி வச்சுப் பாட்டுப் போடறன்னு’ கேக்கற மாரிச் செல்வத்துக்கு சாதி வெறி இருக்காம். என்னா கண்டுபிடிப்பு!

இந்தப் பாட்ட...ஒரு அக்கிரகாரத்துல ஸ்பீக்கர்ல போட்டு வுட்டா...அங்க வாழறவாளுக்கெல்லாம்...கொஞ்சம் கூட கோவம் வராதா...? அதுவும் காலையிலருந்து ராத்திரி வரைக்கும்...தெனமும் போட்டுக்கிட்டே இருந்தா...? எல்லா பிராமணாளும் ’எங்கே தேவர் காலு எங்கே தேவர் காலுன்னு ஓடீ போயி...உழுந்து கும்பிடுவாளோ...என்னமோ!’

அந்த மாதிரித்தானய்யா...இன்னிக்கு வரைக்கும் அந்தப் பாட்டையும்...’சண்டியரே...சண்டியரே’பாட்டையும் ஆதிக்கச் சாதிக்காரனுங்க பள்ளர் பறையர் தெருக்கள்ல போட்டுப் போட்டு வெறுப்பேத்தறானுங்க...!
இமானுவேல் சேகர்னு ஒரு பள்ளர் சாதித் தலைவர், முத்துராமலிங்கத் தேவர் முன்னால கால் மேல கால் போட்டு ஒக்காந்ததுக்காக, தேவரோட ஆளுங்க அந்தத் தலைவரைக் கொலையே பண்ணின மண்ணு அது.

அதுக்கப்புறம் டாக்டர் கிருக்ஷ்ணசாமி மாதிரி வெகு பேரு, போராடி...பள்ளருங்களுக்கும் மத்த ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் மானம் மருவாதியக் காப்பாத்திக் கொடுத்துருக்காவ. அந்த மண்ணுல கமலு படம் எடுக்க ஆயிரம் கத இருக்கு. ஆனா...அவருக்கு, ‘தேவர் காலடி மண்ணை...போற்றிப் பாடற கதைகள் மட்டும்தான் புடிக்கும்’

கால்மேல கால் போட்டதுக்கே தலைய வாங்கற சாதியோட பெருமைய ‘போற்றிப் பாடணுமா?’ ன்னு மாரிச் செல்வம் கேக்கறாப்ல. ஆமா...இல்லன்னு பதில் சொல்லிட்டுப் போகாம..
’ஒனக்கு சினிமா தெரியுமா? சினிமா பார்க்கத் தெரியுமா? கமல் சாரைப் பார்த்தே...இப்புடிப் பேசுவியா...? அவரு எம்மாம் பெரிய பருப்புத் தெரியுமா...?’ன்னு அள்ளக் கைகள் எகிறிக் குதிக்குது அந்த வலைத்தளத்துல.

’பார்ப்பானையும் பாம்பையும் கண்டா பார்ப்பான மொதல்ல அடி’ன்னு சொன்ன பெரியாரோட புகழ் பரப்பற பாட்டுகளை நாங்க சிடி போட்டுத் தர்றோம். கமலும் அவரோட அள்ளக் கைகளும் அக்கிரகாரம் அக்கிரகாரமா போய் போடட்டும். என்னா...டீலிங்க் எப்புடி இருக்கு?

சில மேதாவிக...’சினிமாவ சினிமாவா பாருங்க’ன்னு ,மெசேஜ் குடுக்குது. ’ஏண்டா சினிமாவை என்ன சீட்ட்டாட்டமாவாடா பார்ப்பாங்க?
இவனுங்களோட நியாயத்தப் பாருங்க.

1. குருதிப் புனல் - தீவிரவாதத்தை விமர்சிக்கும் படம்
2. ஆளவந்தான் – மனச் சிதைவு / குடும்பச் சிதைவை விவரிக்கும் படம்
3. விருமாண்டி – மரண தண்டனைக்கு எதிரான படம்
4. அன்பே சிவம் – கம்யூனிசப் படம்
5. தசாவதாரம் – கேயாஸ் தியரியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்
6. உன்னைப் போல் ஒருவன் – இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு எதிரான படம்

தேவர் மகன் - ?

’அட அது ஒரு படம் சார். அவ்வளவுதான். அதுக்கு நீங்க ஏன் கலர் கொடுக்கறீங்க?’
அடங்கொய்யால...மத்த...சினிமாவுக்குள்ள தத்துவம் இருக்கு. தேவர் மகன்ல மட்டும் சினிமா மட்டும்தான் இருக்கா...? அந்தப் படத்துல சாதி இல்லையா?
அந்தப் படத்துல வர்ற சிவாஜியும்...கமலும் எப்படிக் காட்டப்பட்டாங்களோ...அது சாதி ஆதிக்கத்தைத் தூக்கிப் பிடிக்கிற மாதிரி கொஞ்சம் கூடத் தெரியலையா...?

அது ஒண்ணுமில்ல அள்ளக் கைகளா... நீங்கள்லாம்...பாதுகாப்பா வாழறீங்க...ஒங்க சாதி என்னன்னு எவனுக்கும் தெரியாத மாதிரி வேசம் கட்டி அலையறீங்க... ஒங்க அப்பனை எவனும் ‘டேய்...தேவடியா மவனே...வந்து மாட்ட அவுத்து வுடுடா...’ன்னு திட்டறதில்லை.
அதனால...மாரிச் செல்வத்தோட அழுகை உங்க கண்ணுக்குத் தெரியாதுதான்.
உங்க கண்ணுக்கு நல்லாத் தெரிஞ்ச ஒண்ணு என்ன தெரியுமா...?
ஒங்க தலைவர் மவளுவளோட தொப்புளும் தொடையும் தான்...

நல்லா பாருங்க....
அதுங்கதான் இப்ப இந்தியா லெவல்ல பேமஸூ....

சினிமாவ சினிமாவா பாருங்க...
தொப்புள தொப்புளா பாருங்க
தொடய தொடையா பாருங்க...
ஐயோ...நம்ம கலைஞானி கமலோட பொண்ணுங்க தொப்புளாச்சே...அப்புடீன்னு கண்ண மூடிக்கவா போறீங்க?

ஆனா...நாங்க மூடிக்குவோம் ...அந்தக் கருமத்தப் பார்க்க மாட்டோம்...
ஏன்னா... எங்களுக்கு சாதிக் கொடுமையோட வேதனையும் தெரியும்...
ஆணாதிக்க வக்கிரத்தோட கொடுமையும் தெரியும்.

ரவிக்கை போட்டுக்கிட்டு வீட்ட விட்டு வெளில போறதுக்கே எங்க தாத்தன் பாட்டி காலத்துல போராட்ட்டம் நடத்த வேண்டி இருந்துச்சி....
எங்க பரம்பரையில...தொப்புளு தொட...இதெல்லாம்...ஆதிக்கச் சாதிக்காரனுக வெறிக்கு பலியாகி...பலியாகி...அந்த உறுப்புகளைப் பார்த்தா...காமம் கண்றாவியெல்லாம் வராது...

வயக்காட்டுல நாத்து நடறப்போ...சர்வசாதாரணமா பொடவைய தூக்கிக் கட்டிக்கிட்டுத்தான் எங்க அக்கா தங்கச்சி அம்மா அப்பத்தா எல்லாம் வேலை பார்க்கிறாக... எவனும் உத்துப் பாக்கறதில்ல...

உரிச்சுப் போட்ட கோழி மாதிரி பொண்ணுகளைத் தொங்க வுட்டு...தானும் சட்டை, பேண்டைக் கழட்டி...வெறும் டவுசரோட ஆட்டம் போடற...கமலகாசருக்கும் அவரோட அள்ளக் கைகளான...(அதாவது அவரோட ’கலை’ நிபுணத்துவத்தை போற்றிப் புகழ்கிற) ஒங்களுக்கும் பொம்பளைன்னா...
அதுவும் தொடையையும் தொப்புளையும் காட்டினா...’அத்தினி சித்தினி பத்தினி’ன்னு மூடு வந்துடும்.
இதே மூடுதானே...ஒங்க ஒலக நாயகரு மவளுகளைப் பார்க்கறப்பவும் வரும்?
அவருக்கு இது தெரியாதா என்னா...? (அதுவும் பொம்பளைங்க டிரஸ்ஸ அவுக்கறதுல....அவருக்குத் தெரியாதது ஏதாச்சும் இருக்குமா...?)
காசுக்காக...இதுவும் செய்வாரு...இன்னுமும் செய்வாரு...
வேணும்னா...ஒங்க மொழியில கலைக்காக இதுவும் செய்வாரு...இன்னுமும் செய்வாருன்னு....
திருத்திப் படிச்சுக்கோங்க...!

அதனால,
ஒங்களைக் கேட்டுக்கறது என்னான்னா...
ஒங்க ஒலக நாயகர் ஆச்சி...அவர் கலைக் குடும்பம் ஆச்ச்சி...ஒங்களோட கலைச் சேவைகள் ஆச்சி!
அத்தோட நிறுத்திக்கங்க...!
நாங்க...பொலம்பறது...எங்க ஊட்டுல ஒலக நாயகனால வுழுந்த எழவுக்கான ஒப்பாரி...!
அதையும் தடுக்க தாண்டிக்குதிக்காதீங்க...!
உங்க ஆளு ப்ளே பாய் வேசம்லாம் கட்டி...ஹீரோயின்களை உருட்டி விளையாண்டப்ப...ஆதிக்கச் சாதிக்காரனுங்ககிட்ட எங்க வூட்டுப்பொண்ணுங்களை பலி கொடுத்து...அதுகளுக்கு கருமாதி செய்யக் கூட வக்கில்லாம அழுது நின்னவங்க நாங்க.
புரியல...?
கொடியன்குளத்துல என்னா நடந்துச்சுன்னு கமலகாசருக்கிட்ட கேளுங்க...!
ஒங்களுக்கு தில் இருந்தா...கொடியன் குளத்தப் பத்தி ஒரு படம் எடுக்கச் சொல்லுங்க...ஒங்க ஒலக நாயகர...!

Wednesday, March 3, 2010

நித்தியானந்தா… மெட்டி ஒலியை மிஞ்சிய ஜட்டி ஒலி ரேட்டிங்க்!

’கதவைத் திற காற்று வரட்டும்’னு ரைமிங்கா சொல்லத் தெரிஞ்ச சாமிக்கு ‘கதவைத் திறக்கலன்னாலும் கேமரா’ வரும்னு தெரியாமப் போச்சே...! என்ன கொடுமைய்யா இது! ரெண்டு நாளா தமிழ்நாடே பரபரக்குது. நெற்றிக்கண்ணைத் திறந்து அநீதிகளைத் தட்டிக்கேக்கிற நக்கீரன் சேல்ஸ் நேத்து பிச்சிக்கிச்சி. சென்னையில நக்கீரன் பொஸ்தவம் 25 ரூவா! அம்புட்டு ஆர்வம் நம்ம வாசகர்களுக்கு. பின்னே...அநீதியத் தட்டிக் கேக்கறதுன்னா...போட்டி போட்டுக்கிளம்பற பயபுள்ளகளாச்சே...!

’அதுவும் நம்ம ரஞ்சிதா…அடுத்தவனோட படுக்கறதா…?
நான் எத்தனை வருசமா கனவு கண்டுக்கிட்டிருக்கேன்…பய புள்ள ஏமாத்திப்புட்டாளப்பா…!
இந்த அநீதியத் தட்டிக்கேட்டே ஆவணும்! வாங்கு நக்கீரனை…!
படத்தப் பார்த்தாவது தணிச்சுக்குவோம்…தாகத்த…!’

அட...இந்த சன் டிவி...
என்னா டி ஆர்பி ரேட்டிங்கு...! மெட்டி ஒலியை விட இந்த ஜட்டி ஒலிக்குத்தான் ரேட்டிங் அதிகமாம் சாமி. அதனால...’கெளம்புங்கடா கேமராவைத் தூக்கீட்டு...ங்கொய்யால எங்கெல்லாம் முக்கல் முனகல் கேக்குதோ அங்கெல்லாம் இண்டு இடுக்காப் பார்த்து செட் பண்ணுங்க...’ன்னு சேனலே அல்லோலகல்லோலப்படுதாம்.

நக்கீரன் இணையத் தளத்துல உள்ள அறிவிப்பப் பார்த்துட்டு எனக்குப் புல்லரிச்சுப்போயி பெரிய வக்கப்போராப் பார்த்து நேத்து முழுக்க ஒரசி ஒரசி சொறிஞ்சும் அரிப்பு அடங்கல. ‘நித்தியானந்தம் - ரஞ்சிதா லீலைகள் முழு நீள வீடியோ காண subscribe செய்யுங்கள்’-ங்கறதுதான் அந்த அறிவிப்பு!

நக்கீரன், சன் டிவி குரூப்புங்களே...நித்தியானந்தம் ரஞ்சிதா பலான படத்துல நீங்க கட்டற கல்லாவுல அவுங்க ரெண்டு பேருக்கும் எதுனாச்சும் கமிசன் குடுப்பீங்களா? இல்ல...அம்புட்டும் ஒங்க ரெண்டு பேருக்கு மட்டுந்தானா?

எனக்கு என்னா வெசனம்னா...பட்ஜெட்ங்கற பேர்ல...என்னைப்போல சாமானியனுகளோட சங்க அறுக்கற மாதிரியான திட்டங்கள டில்லி ராஜாக்கள் தீட்டி மூணு நாள் கூட முழுசா முடியல...ஏற்கனவே பாதி சனம் அரை வயித்துக் கஞ்சிக்கே வக்கில்லாம, ‘வாழ்ந்துக்கிட்டிருக்கோமா? இல்ல செத்துக்கிட்டிருக்கோமா?’ங்கற கொழப்பத்துல இருக்கு. இந்த லட்சணத்துல மேலும் இருவது சதவீதம் விலை உயரும்னு அவனவன் அரண்டு போயிருக்கான். இந்த பஞ்சாப், உபி, மபியிலல்லாம்...’ஏய்...த்தா...வெலையக் கொறடா...’ன்னு சனம் வீதி வீதியா கொடி புடிக்குது. அதேமாதிரி நம்ம தமிழருங்களையும் உசுப்பேத்தி உட்டா பத்திக்குமேன்னு கனவு கண்டுக்கிட்டிருந்தேன்.

முழிச்சுப் பார்க்கறதுக்குள்ள பலான படத்தக் காட்டி உசுப்பேத்தி உட்டு...போராட்டம் பத்த வேண்டிய நேரத்துல அவனவனும் ‘ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு’ன்னு ஹை பிச்சுலல்லய்யா பாடறான்! இந்த லட்சணத்தில...கல்கி சாமி, கோயம்புத்தூர் சாமின்னு வரிசையா பட ரிலீஸ் வேற!

ஆகமொத்தம்...இந்த பட்ஜெட்டு வெற்றிகரமா தமிழ்நாட்டுல நிறைவேற்றப்பட்டிருச்சு!

‘அட...என்னய்யா நீ...எதுலப்பாரு குத்தம் சொல்றியே... இதுவும் ஒரு சமூகப் பெரச்சனதான?ன்னு செலபேரு கேக்கறாங்க. அப்புடி ஒரு நம்பிக்கை எனக்கும் இருந்துச்சு. எதுவரைக்கும் தெரியுமா?

காஞ்சி சங்கராச்சாரி – சொர்ணமால்யா பலான மேட்டர், சங்கராச்சாரி கொலை கேசு...இதெல்லாம் சனநாயகக் காவலருங்களான மீடியாக்காரங்களால பிரிச்சு மேயப்பட்டப்போ...’அட...இதுக்குப்பொறகு பாரு...ஒரு பயலும் காஞ்சிபுரத்து பஸ்ல கூட ஏற மாட்டான்...அட...அந்த ஊரே காலியானாலும் ஆச்சர்யமில்லப்பு... இந்த சங்கராச்சாரி...இம்புட்டு மோசமானவனா...ன்னு அந்தாளு சாதிக்காரங்களே...காறித்துப்பிடுவாய்ங்க...’ன்னு ஓசி டீ குடிச்சிட்டு ஒளறிக்கிட்டிருந்த பரதேசிங்கள்ல நானும் ஒருத்தந்தான்!

என்ன ஆச்சி...?
’போங்க தம்பி...நாங்க பாக்காத பிட்டுப் படமே கெடையாது...எவ்ளோ பார்த்தாலும் எவன் படம் பார்த்தாலும்...கத்துனதும் கிடையாது...அவனைப் பார்த்து நாலு சாத்து சாத்துனதும் கிடையாது...பாத்தோமா அடுத்த படத்துக்கு வெயிட் பண்ணினோமான்னு இருக்கோம்...நீ என்னமோ பீத்தற...ஹே ஹே...’ன்னுட்டாய்ங்க நம்ம ஆளுங்க.

இன்னிக்கும் காஞ்சி மடம் அதே மருவாதியோடத்தானே இருக்கு!
மடத்து சாதிக்காரங்க...சங்கராச்சாரியை ஒதுக்கியா வச்சுட்டாங்க?

அட அத வுடுங்க...
பிரேமானந்தா சார்...இன்னுக்கும் ஜெயில்ல இருக்காப்ல. ஆனா அவரு ஆசிரமங்கள்லாம் நல்லபடியாத்தானே சாமி ஓடிக்கிட்டிருக்கு...! கொலை, கற்பழிப்பு…ன்னு கேஸ் போட்டு அந்த கேஸ்லாம் நிரூபிக்கவும் பட்ட பொறவும்….பிரேம்ஸ் ஆசிரமங்களுக்குக் கோடி கோடியா பணம் குடுக்கறவங்க யாரு…?

தர்மபுரம் ஆதீனம்…ஞாபகம் இருக்கா?
வாரிசுப் போட்டியில…பெரிய ஆதீனத்தை சின்ன ஆதீனம் கொல்லப் பார்த்துச்சு…மடத்துக்குள்ள ஏகப்பட்ட பலான மேட்டருங்கன்னு பரபரத்துச்சு…இப்ப என்ன ஆச்சு?
’ச்சீ…நீங்கள்லாம் இவ்ளோ கெட்டவங்களா?...ன்னு மக்கள் எல்லாம் தர்மபுரம் ஆதீனத்தை வெலக்கி வச்சுட்டாங்களா?
இன்னிக்கும் பல ஆயிரம் கோடி ரூவா சொத்து இருக்கு…அந்த ஆதீனத்துக்கு…!

காஞ்சிபுரம் தேவநாதனோட பிட்டுப் படத்தப் பார்த்த பொறவு…
பொம்பளைங்க யாரும் கோயிலுக்குப் போறத நிறுத்திட்டாங்களா?
இல்ல…
’…த்தா…உள்ள வச்சு ஜல்சா பண்றதுக்காகத்தான்…எங்களையெல்லாம் கருவறைக்குள்ள வுட மாட்டேங்கறீங்களாடா…?’ன்னு ஒரே ஒரு பொதுசனம் கேட்டு…உள்ள நொழைஞ்சு பார்த்ததா சேதி உண்டா?

அட இந்த ஜக்கி…கஞ்சா கடத்துதுன்னு எழுதுன அதே நக்கீரந்தான்…ஜக்கியோட தத்துவ பொஸ்தவத்தைப் போட்டு விக்குது…
எவன் கேக்கறது?

சாயி பாபாவைப் பத்தி...எளுதாத பலான மேட்டரா?
இன்னிக்கு...?
அந்த யோக்க்கியரு...தமிழ்நாட்டு அரசுக்கே 500 கோடி ரூவா ஒதவி பண்றாரு...
என்னா...நக்கலு...தெனாவட்டு...திமிரு...?ன்னுதான் எம்மனசு அடிச்சுக்குது...
ஆனா...அமைச்சருங்களே அந்த பாபாவோட பக்தருங்களாமே...
எங்க போயி முட்டிக்கறது?

இதுக்கும் மேல பட்டியல்களை எழுதுனா...எனக்கே ஏதோ பிட்டுப் படத்துக்குக் கதை வஜனம் எழுதுற மாதிரி கூசுது...
அதுனால மேட்டருக்கு வர்றேன்...

இந்த பலான சாமியாருங்களை வச்சு பலான படம் எடுக்கறதால...சேனல்காரனுங்களுக்கும் பத்திரிக்கைக்காரனுங்களுக்கும்தான் லாவமே தவிர...
நமக்கு இதுனால...ஒரு மயித்துக்கும் புண்ணியமில்ல...!

இப்ப சொல்றேன் எழுதி வச்சுக்கங்க...
நித்தியானந்தத்துக்குப் பத்தாயிரம் கோடி ரூவாய்க்கு சொத்து இருக்காம்...இன்னும் ஒரே ஒரு வருசம் கழிச்சுப் பாருங்க...அது பத்தாயிரம் கோடியே ஒரு ரூவாய்...ன்னு ஆனாலும் ஆகுமே தவிர...ஒரு ரூவா கூட கொறையாது...

இந்த மாதிரிப் படம் வெளியாகும்போது சம்பந்தப்பட்ட சாமியாருக்குக் கருப்புக் கொடி காட்டறதனால...கருப்புத் துணி சேல்சு வேணா அதிகமாகும்...வேற ஒன்ணும் ஆவப் போறதில்ல...

அதேமாதிரி...பேனர் கிழிக்கிறது...ஆசிரமத்தை ஒடைக்கிறது...இதெல்லாம் சும்மா...நம்மள மாதிரி பாவப்பட்டதுக செய்யற வேலை...!

ஆனா...இதுனாலல்லாம்...எந்தச் சாமியாருக்கும் எந்தப் பெரச்சினையும் இல்ல...ஏன்னா...பேனர் கிழிக்கிறவங்களோ...மடத்தஅடிக்கிறவங்களோ அந்த சாமியாரை வளர்க்கலை...!

சாமியாருங்களை வளர்க்கறவங்கள்லாம் யாரு தெரியுமா?

எந்த சன் டிவி இந்த பலான படத்தப் போட்டுச்சோ...அந்த சன் டிவியோட ஓனர் குடும்பங்களும்...
எந்தப் பத்திரிகைங்க...நித்தியானந்தத்தைக் கிழிக்குதோ...அந்த பத்திரிகை ஓனர் குடும்பங்களும்...

’கழுத்து வரைக்கும் தின்னுப்புட்டேன்...டைஜஸ்ட் ஆகல சாமி...நீங்கதான் காப்பத்தணும்...’னு கவுன்சிலிங்குக்குப் போறதுகளும்...

’என் புருசன்...என்னைக் கவனிக்கவே மாட்டேங்கறாரு சுவாமிஜி...கேவலம் ஒன் க்ரோர் சம்பாதிக்க...ஒன் மந்த் வெளியூர் போயிடறாரு...தனியா இருக்கவே கஸ்ஸ்ஸ்ஸ்ட்ட்ட்ட்ட்மா இருக்கு...’னு பீல் பண்றதுகளும்...

’சுவாமிஜி...அக்கவுண்டல வராத அமவுண்டா நூறு கோடி இருக்கு...என்ன பண்றதுன்னே புரியல...படுத்தா தூக்கம் வரமாட்டேங்குதுன்னா பாருங்களேன்...தட் மச் ஸ்டெர்ஸ்...’னு பொலம்புற பெருச்சாளிகளும்...

‘அந்த சாமி நல்லா யோகா கத்துக்குடுப்பாரு சார்...செம ரிசல்ட்டு...மைண்ட் ஃப்ரீயா இருக்கு..நீங்களும் வர்றீங்களா...’ன்னு கேட்டு...யோகா மாஸ்டருங்களையெல்லாம் சாமின்னு நினைச்சுக் கும்பிடற அப்பாவி மிடில் க்ளாஸ்சுங்களும்தான்...சாமியாருங்களை சிக்கன் மட்டன் குடுத்து வளர்க்கறது...!

இப்புடி வளர்த்துவுட்ட பொறவு...
கொழுப்பும் தெனவும் ஏறிப்போய்... அவனுங்க உடம்பு வெத வெதமான பொம்பளைங்களைத்தான் கேக்கும்!

இப்ப சொல்லுங்க...நித்தியானந்தம் ஆசிரமத்தை அடீச்சு நொறுக்கறதுக்கு...மேல சொன்ன குரூப்புங்கள்ல எந்த குரூப்பு வரும்?

கடைசி குரூப்பு இருக்கே...யோகா குரூப்பு அதுல மட்டும்தான் கொஞ்ச பேருக்கு மானம் மருவாதி சூடு சொரண இருக்கும்...மத்ததுக வாழ்க்கையில...பொண்டாட்டி புருசன்ங்கற வார்த்தைங்களைவிட....சக்களத்தி... கீப்பு...அயிட்டம்...மாதிரியான வார்த்திங்கதான் பொழக்கத்துலயே இருக்கு...

அதுங்க இந்தப் படத்தைப் பார்த்தா என்ன தெரியுமா சொல்லும்...?
‘ஏய்...அங்க பாருடீ..ரஞ்சிதா ஃபேஸ்ல ஒரு பேச்ச் இருக்கு...ஏதோ லோக்கல் க்ரீம் யூஸ் பண்ணுவா போல...சுவாமிஜிட்ட போகும்போது கூட இப்புடியா போறது...நான்லாம் கார்னியர்தாம்பா’
-இந்த ரேஞ்சுலதான் இருக்கும் ரெஸ்பான்சு...!

அதுனாலதான்...பலான கேஸ்ல சிக்குனாலும் சாமியாருங்க வளர்ந்துக்கிட்டே இருக்காய்ங்க...

அதனால...
நக்கீரன், சன் டிவி மாதிரி செக்ஸ் வியாபாரிங்க காட்டற படத்தைப் பார்த்துப் பொங்காம...நெதானமா ஒக்காந்து யோசிங்க...
இந்த மாதிரி பலான படம் மறுபடி காட்டுனாய்ங்கன்னா...போனைப் போட்டு...ஒங்களுக்குத் தெரிஞ்ச எல்லாக் கெட்ட வார்த்தைங்களையும் யூஸ் பண்ணித் திட்டுங்க...
இல்லன்னா...
அந்த வார்த்தைங்களையெல்லாம் கொட்டி கடுதாசியா எழுதி...அனுப்புங்க...
ஒங்க சொந்த பந்தங்கள்கிட்டப் பேசி...அந்தக் கருமத்தப் பார்காதப்பு...னு சொல்லுங்க...

இதெல்லாம் பன்னி ஒதர்ற சேறு நம்ம மேல தெறிக்காம இருக்கறதுக்காக...
பன்னிய எப்புடி வெரட்டறது?

தூக்கம் வரலை...உடம்பு பெருக்குது...பிஸினஸ் டல்லாயிருக்கு...மனசே சரியில்ல...இப்புடிப்பட்ட காரணங்களுக்காவ...அந்தப் பன்னிங்களைத் தேடிப் போவாதீங்க...
ஆசைய அடக்கிக்கிட்டு...உடம்பால ஒழைச்சு...நல்லா கவனிங்க...வெறும் மூளையால இல்ல...ஒடம்பால ஒழைச்சு...வாழ்ந்துக்கிட்டிருந்தா...
தூக்கம் நல்லா வரும்...ஒடம்பும் பெருக்காது...!

நான் ஆசையே படறதில்ல சார்னு சொல்லிக்கிட்டு...
’பையனோட எல்கேஜ்ஜி ஸ்கூல் பீசு...ஜஸ்ட் இருவதாயிரம்தான்...
ஏசி இல்லன்னா என்னால தூங்கவே முடியல சார்...என் பையன் ஏசி நின்னா ஒரே செகண்டுல முழிச்சுடுவான்...
அம்பதாயிரம் இல்லன்னா மாசத்தை ஓட்ட முடியலைங்க...இதுல இருவதாயிரம் லோனுக்கே போவுது...’
-இப்புடியெல்லாம் டயலாக் வுடறதா இருந்தா...அதெல்லாம் ஆசை இல்லதான்...!
ஆனா...
பேராசை...!

அடப் பாவி...இதுகூட இல்லாம எப்புடீ வாழறது?ன்னு கேட்டா...கொஞ்சம் செலவு பண்ணி...ஒங்களுக்குத் தெரிஞ்ச கெராமங்களுக்குப் போய்ப் பார்த்துட்டு வாங்க...(சிட்டி லிமிட்லேருந்து குறைஞ்சது நூறு கிலோ மீட்டர் இருக்கற ஊராப் பாருங்க) முடிஞ்சா தங்கிப் பாருங்க...

அங்கெல்லாம்தான் யோகாவும் இல்ல...சுவாமிஜியும் இல்ல!

அதுவும் சீக்கிரம் போறது நல்லது...
ஒரு ரூவா அரிசியும் இலவச டிவியும் போயி...அங்கயும்...சுவாமிஜிகளுக்கான டிமாண்டை உருவாக்கிக்கிட்டிருக்குங்கோ...!

Saturday, February 27, 2010

பட்டினிச் சாவின் முன்னறிவிப்பு!

நெல் விவசாயம் ஒரு காலத்தில் ஆற்றுப் பாசனத்தில் மட்டும் அதிகம் மேற்கொள்ளப்பட்டது. அதுவும், மூன்று போகங்களும் நெல் பயிரிடாமல் கேழ்வரகு, கடலை, எள், உளுந்து, பயறு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் கலந்த வேளாண்முறை இருந்தது. இதனால், எந்தக் குறிப்பிட்ட பயிரும் மிகையாக உற்பத்தி செய்யப்படாமல், உற்பத்தி அளவு கட்டுக்குள் இருந்தது. மேலும், பலவகைப் பயிர்கள் உணவுக்குக் கிடைத்ததால் மக்களது உணவுப் பழக்கம் சீராகவும் சத்துள்ளதாகவும் இருந்தது.

குறிப்பாக, கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச் சத்து அதிகம் உள்ள அரிசியை அளவோடு உண்டு நலமாக வாழ்ந்தனர் நம் மூத்த தலைமுறையினர்.

புன்செய் எனப்படும் ஆற்றுப்பாசனமில்லா நிலப்பகுதிகளில் கம்பு, கேழ்வரகு, வரகு, சோளம் (வெள்ளைச் சோளம், காக்கா சோளம், முத்துச் சோளம்), சிலவகை நெல் வகைகள் – மட்டை நெல் அல்லது சிவப்பரிசி நெல், மாப்பிள்ளைச் சம்பா, குச்சி நெல், மடுமுழுங்கி உள்ளிட்டவை- கடலை, உளுந்து, துவரை, எள், காய்கறிகள் – அதிகம் நீர் தேவைப்படாத வகைகள் – உள்ளிட்ட பல்வேறு விதமான பயிர்கள் புன்செய் நிலப்பரப்பில் விளைவிக்கப்பட்டன.

பசுமைப் புரட்சி என்ற ஊழல் புரட்சி ’உணவுத் தட்டுப்பாடு’ என்ற பொய்யைக் கூறியது. அரிசி மட்டும்தான் உணவு என்று அவர்களாகவே முடிவு செய்துவிட்டு, அரிசியின் உற்பத்தி அளவு போதாமையில் உள்ளது என்றனர். இதற்காக அவர்கள் அள்ளி விட்ட புள்ளி விவரப் புளுகு மூட்டைகள் கணக்கிலடங்காதவை.

இதன் விளைவாக, நெல் பயிரிடுவதற்கு அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் பல்வேறு ஊக்கத்திட்டங்களை அறிவித்தனர்.

• புதிய – வீரிய நெல் வகைகள் கண்டுபிடிப்பு
• இரசாயன உரங்கள் அறிமுகம்
• பூச்சிக் கொல்லிகள், களைக் கொல்லிகள் அறிமுகம்
• நெல்லுக்குக் கூடுதல் விலை
• அரிசி உண்பதே உயர்ந்தது எனும் மறைமுக உளவியல் பிரசாரம்
• நெல் பயிரிட்டால் கடன் வசதி (இப்போதும் விவசாயக் கடன் நெல் விவசாயத்துக்கே வழங்கப்படுகிறது / முன்னுரிமை வழங்கப்படுகிறது-நானே வாங்கியுள்ளேன்!)
• நெல் கொள்முதலுக்கு அரசு பொறுப்பேற்பு
• பிற தானியங்களைப் புறக்கணித்து ஒழித்தல்
-என பல நடைமுறைகள் வழியாக நெல் பயிரிடலை அதன் தேவைக்கும் திறனுக்கும் சற்றும் பொருந்தாத முறையில் அதிகப்படுத்தியது பசுமைப் புரட்சி.
விளைவு...
ஆற்றுப் பாசன விவசாயிகள் நெல் தவிர வேறு பயிர் செய்ய இயலாதவர்களாக மாறிவிட்டனர். ஆடு, மாடு, கோழி வளர்க்கக் கூட நிலம் இல்லாத வகையில் எங்கு பார்த்தாலும் நெல் வயல்கள்!
பல ஊர்களில் குறிப்பிட்ட காலத்திற்கு ஆடு வளர்க்கத் தடையே உள்ளது. ஆற்றுப் பாசன ஊர்கள் பலவற்றில் எப்போதுமே ஆடு வளர்க்கக் கூடாது அல்லது ஆடு வளர்ப்பவரின் வேலி தாண்டி வரக்கூடாது.

இவையெல்லாம் எதற்கு?
நெல் சாகுபடியைப் பாதுகாப்பதற்கு!

ஆனால், தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு நெல் சாகுபடி செய்யும் விவசாயி கடனில் மூழ்கி நிலத்தை விற்க வேண்டியுள்ளது என்பதுதான் நிலை. விளை நிலங்கள் வீட்டு மனைகள் ஆக்கப்படும் வழக்கம், நெல் விவசாயம் செய்யப்படும் பகுதிகளில்தான் அதிகமாக உள்ளது என்பதைக் கவனித்துப் பார்த்தால் உண்மையின் சூட்டை உணர முடியும்.

மக்களின் பொது உணவாக அரிசி மாறிவிட்டதால், போதுமான அரிசி உற்பத்தி அளவைத் தமிழகத்தால் எட்ட முடியவில்லை. இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் அதிக அரிசியைத் தமிழகத்தில் இறக்குகின்றன.

இந்த மாநிலங்களில் எல்லாம், அரிசி மட்டுமே உண்ணும் மூடத்தனம் இல்லை. சான்றாக, பெங்களூரில் கூட ராகி முத்தே எனப்படும் கேப்பைக் கூழ் உருண்டை தாராளமாகக் கிடைக்கிறது. கிராமங்களுக்குச் செல்லச் செல்ல இந்தப் பழக்கம் கம்பங்களி, வரகுச் சோறு, தினைச் சோறு, சாமைச் சோறு என அதிகரிப்பதைக் காண முடியும். ஆந்திராவிலும் இதே நிலைதான்.
இதனால்தான் அவர்களால் தமிழ்நாட்டுக்கு அரிசி விற்க முடிகிறது.

நம் கிராமங்களோ, ஒரு ரூபாய் அரிசி இல்லாவிட்டால் பட்டினிச் சாவு என்ற அபாயத்தை நோக்கிச் சென்றுவிட்டன. இது மிகையல்ல, முழு உண்மை!

நெல் சாகுபடியின் வரவு – செலவுக் கணக்கைப் பார்ப்போம்.

ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்குக் குறைந்தளவுச் செலவு ரூ.25 ஆயிரம் ஆகும். இது, விவசாயம் செய்பவருடைய உழைப்பைக் கணக்கிடாத செலவு ஆகும். விவசாயி தன் குடும்பத்தினருடன் இணைந்து உழைத்துதான் பயிரிடலில் ஈடுபடுகிறார்.
விதை, கூலியாகக் கொடுக்கும் பணம், பூச்சிக் கொல்லிகள் மற்றும் இரசாயன உரங்களுக்கான செலவு ஆகியவற்றை மட்டும் கணக்கில் கொண்டு மேற்கண்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு ஏக்கர் விளைச்சல் சராசரியாக – 30 மூட்டைகள்.

அதிக விலை மதிப்பு கொண்ட பொன்னி ஒரு மூட்டை ரூ.1050
குறைந்த விலை மதிப்பு கொண்ட வகைகள் ஒரு மூட்டை – ரூ 450
(கோ 43, குச்சி நெல் உள்ளிட்டவை)

இந்தக் கணக்கின்படி,
ஒரு ஏக்கருக்கு-
அதிகளவு வருமானமாக ரூ. 31,500
குறைந்தளவு வருமானமாக ரூ.13,500
கிடைக்கிறது.

குறைந்த விலை மதிப்புள்ள வகை நெல் பயிரிடலில் விதை விலை மட்டுமே குறையும். மற்றச் செலவுகள் குறையாது. அதேவேளை பொன்னி உள்ளிட்ட அதிக விலை மதிப்புள்ள நெல் வகைகள் பராமரிக்கக் கடினமானவை. ஆகவே, அவற்றின் செலவு மேற்கண்ட சராசரிச் செலவைக் காட்டிலும் கூடுதலாகும். இவ்வகை நெல் வகைககள் அதிக வெப்பம், அதிக மழை ஆகிய இரு சூழல்களையுமே தாங்காதவையாகும். இதற்கேற்ப, வெப்பம் மிகுந்தால் நீர் பாய்ச்சிக் கொண்டேயிருக்க வேண்டும். மழை வெள்ளம் வந்தால், மழையில் நனைந்துகொண்டாவது மிகை நீரை வெளியேற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

இவை தவிர, நோய் தாக்குதல், விதை பழுது காரணமாக விளைச்சல் குறைதல், ஆள் பற்றாக்குறை / கூலி உயர்வு காரணமாக பராமரிக்க இயலாத நிலை உள்ளிட்ட எண்ணற்ற காரணிகள் செயல்படுகின்றன. இவ்வளவையும் மீறி விளைவிக்கப்படும் நெல்லுக்குத்தான் மேற்கண்ட விலை!

ஆக, கணக்கிட்டுப் பார்த்தால் நெல் விவசாயம் என்பது இழப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்பதே உண்மை. இதனால்தான் நெல் விவசாயம் செய்யப்படும் பரப்பு நம் கண்ணெதிரே குறைந்துகொண்டே வருகிறது. ஆனால், அரசு கொடுக்கும் புள்ளிவிவரங்களோ தலைகீழானவை. உற்பத்தி உபரியாக உள்ளது என்கிற விததில்தான் ஒவ்வொரு முறையும் அரசு அறிவிக்கிறது.

இனி...நெல் அரிசியாக் மாறும் நிலையில் உள்ள கணக்குகளைப் பார்ப்போம்!

ஒரு மூட்டை நெல் 62 கிலோ ஆகும். இதில் சாக்கு எடை என 2 கிலோ வியாபாரிகளால் கழிக்கப்படும். உண்மையில் சாக்கின் எடை 1 கிலோவுக்கும் குறைவே!

60 கிலோ நெல் அரைத்தால் 35 -40 கிலோ அரிசி கிடைக்கும். இதன் சராசரி அளவாக 37 கிலோவைக் கணக்கிற்கு எடுத்துக்கொள்ளலாம்.


இதற்கான செலவுகள்:

ஒரு மூட்டைக்கு-
அவித்து அரைக்கும் கூலி –ரூ 35
மூட்டை தூக்குவோர் கூலி –ரூ 5
மொத்தச் செலவு ரூ.40/

அரைக்கும்போது கிடைக்கும் பொருட்களின் மதிப்பு:
குருணை 2 கிலோ – ரூ. 30
தவிடு 21 கிலோ - ரூ. 110
(கிலோ 5ரூபாய்)
மொத்த மதிப்பு ரூ. 140/

ஆக,
நிகர வருவாய் ரூ.100/
(ரூ140-ரூ.40)

இந்த வருவாய் (ரூ.100) ஒருபோதும் விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. அரசு கொள்முதல் செய்யும்போதும் தனியார் கொள்முதல் செய்யும்போதும் இந்த வருவாய் பற்றி வாய் திறப்பதே இல்லை.
தவிடு விற்பனை இன்று மிகப் பெரிய வணிகமாகும்.
கால்நடைத் தீவனங்கள் தயாரிப்புக்கு தவிடு அதிகமாகத் தேவைப்படுகிறது. இது மட்டுமல்ல, தவிட்டிலிருந்து எண்ணெய் எடுக்கும் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்குத் தவிடு ஆயிரக்கணக்கான டன்கள் விற்கப்படுகின்றன. தவிட்டு எண்ணெய் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக பல நூறு கோடிகளைக் குவிக்கிறது. இந்த வருவாய்களில் இருந்து ஒரு பைசா கூட நெல்லை விவசாயம் செய்தவருக்குக் கிடைப்பதில்லை.

இதைவிடக் கொடுமை, இப்படியெல்லாம் வருவாய் வருகிறது என்ற உண்மைகூட விவசாயிகளுக்குத் தெரிவதே இல்லை.

அரிசி விலையின் அதிசயக் கணக்குகள்:

மேலே கண்ட கணக்குகளின்படி ஒரு மூட்டை அரிசி ரூ.1050 என்ற விலைக்கு வாங்கப்படுகிறது. அரவையின் போது கிடைக்கும் உபரி வருவாயான ரூ.100ஐக் கழித்துவிட்டால், நிகரக் கொள்முதல் விலை ரூ.950/ஆகும்.

இம்மூட்டையிலிருந்து குறைந்தளவு 35கிலோ அரிசி கிடைக்கிறது.
அதாவது ஒரு கிலோ அரிசியின் மதிப்பு ரூ.27/-

இந்த அரிசிதான் கடைகளில் ரூ.35 முதல் ரூ.40வரையும், பொருளாதார மந்தம் என்ற பெயரில் சில வேளைகளில் ரூ.45 என்ற விலைக்கும் விற்கப்படுகிறது.

குறைந்தளவு விலையான ரூ.35ஐ எடுத்துக்கொள்வோம்.
ஒரு மூட்டை நெல்லின் கணக்கு எப்படி மாறுகிறதெனப் பார்ப்போம்.

ஒரு மூட்டை நெல்லில் கிடைக்கும் அரிசி மதிப்பு – ரூ.35 * 35கிலோ =ரூ.1225/-

அரிசி விற்பனை மதிப்பு ரூ. 1225
அரவையில் கிடைக்கும் மதிப்பு ரூ.100
மொத்த வருவாய் –ரூ.1325/-
(-)
விவசாயிக்கு வழங்கப்படும் விலை ரூ.1050

நிகர ஆதாயம் = ரூ. 275/

ஒரு மூட்டையில் வணிகர்களுக்கும் இடைத் தரகர்களுக்கும் ஆலை முதலாளிகளுக்கும் கிடைக்கும் ஆதாயம் ரூ.275/

வணிகர்களும் முதலாளிகளும் தங்கள் செலவினங்களையும் முதலீடுகளுக்கான பங்குகளையும் கழித்துப் பார்த்தால்கூட, இத்தொகை அவர்களுக்குக் கொள்ளை ஆதாயத்தையே தருகிறது.

இந்த வணிகத்தின் அடிப்படைக் காரணியான விவசாயி கணக்குப் பார்த்தால், மூட்டைக்கு 1 ரூபாய் ஆதாயம் கூடக் கிடைப்பதில்லை என்பதே உண்மை.

இதே நிலை நீடித்தால், விவசாயிகள் நெல் பயிரிடுவதைக் குறைத்துக்கொள்வார்கள். இதனால், தமிழக உணவுத் தேவையைச் சமாளிக்கப் பேரளவு பிற நாடுகளையும் மாநிலங்களையும் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். விலை ஏற்றம் விண்ணைத் தொடும்.

இன்னும் இரு ஆண்டுகளில் அரிசியின் குறைந்தளவு விலை ரூ.30 ஆகிவிடும் வாய்ப்பே அதிகம். அதிகளவு விலை (பொன்னி வகைகள்) ரூ.50ஐத் தாண்டிவிடும்.

இவை தவிர, கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு, பட்டினிச் சாவுகள் நடக்கும் அபாயத்திற்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. இக் கட்டுரையைப் படிக்கும் நீங்கள் உணர வேண்டிய செய்தி இதுதான்;
’விவசாயிகள் பட்டினி கிடக்கும்போது கண்டுகொள்ளாத சமூகம் ஒருவேளை உணவுக்கும் வழியின்றிச் சாகும்’

Friday, January 15, 2010

சர்க்கர வியாதியா…? சர்க்கர சாப்பிடுங்க!

நம்ம தமிழருங்களை சாதி பிரிச்சு வச்சிருக்குன்னு சில பேரு வருத்தப்படுவாங்க. ஆனா நான் அத நினைச்சுக் கவலைப்படறது இல்ல. ஏன் தெரியுமா? சாதி பிரிச்சாலும் அவங்களை ஒண்ணு சேர்க்கறதுக்குன்னே ரெண்டு விசயங்கள் இருக்கு.
ஒண்ணு வியாதி
இன்னொண்ணு கடன்.

ஊர் ஊரா சுத்தி ஆராய்ச்சி செஞ்சதுல எங்க குரூப்பு கண்டுபுடிச்ச ரகசியம் இது. ஒங்கள்ல எத்தனை பேரு வியாதியோட வாழ்க்கை நடத்தறீங்களோ தெரியல. ஆனா, சத்தியமா ஒண்ணு மட்டும் தெரியும். இதப் படிச்சு முடிச்சதும், ’சரியான நாட்டுப்புறத்தான் பாஸ்...சயிண்டிபிக் அட்வான்ஸ்மென்ட் இன்னும் இவனைப் போய் சேரல’ன்னு என்னை நினைச்சு ஒரு துளி கண்ணீராச்சும் சிந்துவீங்க.

’தமிழனை சாதி பிரிக்குது
வியாதி ஒண்ணு சேர்க்குது’
-ங்கறதுதான் எங்களோட லேட்டஸ்ட் பொன்மொழி!

இப்ப பாருங்க...ஏதாச்சும் பொது எடத்துல நாம சந்திக்கும்போது என்னா பேசறோம்?
’ஹலோ சார்...என்ன ரொம்ப எளைச்சிட்டீங்க? சுகரா?’
’இல்ல சார்...ஒபீசிட்டி இருந்துச்சு...அதான் வொர்க் அவுட் பண்ணி...ட்வண்டி கேஜி கொறைச்சேன்... ஆமா...நீங்க ஏன் இவ்ளோ பல்க்கியா இருக்கீங்க...கொலஸ்ட்ராலா...?’
‘இல்ல சார்...சுகர் லெவெல் கம்மியாயுடுச்சி...95 தான் இருக்கு சார்...’

-இப்புடித்தானே நம்ம ஒத்துமையக் காட்டிக்கிறோம். பொம்பளைங்க பேச்சு வேற வெவரங்களோட இருக்கும். அதச் சொன்னா...நான் மேல் சாவனிஸ்ட்டாயிருவேன்.

முப்பது வயசத் தாண்டினதும், வாக்கிங்க் ஜாகிங் போறது இன்னிக்கு பல்லு விளக்கற மாதிரி கக்கா போறது மாதிரி காலைக் கடன் ஆயிடுச்சி. இதுல வேற...வாக்கிங்க் போற எடத்துல...எதிர்ல வர்ற ஆளைப் பார்த்து...’ஹலோ சார்...இன்னிக்கு எத்தினி கலோரி பர்ன் பன்ணீங்க..?’ன்னு புள்ளி வெவரம் கேட்டு ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்கறது.

ஆனா...எனக்கு ரொம்ப நாளா இருக்கிற சந்தேகம் என்னான்னா...
’அட..இந்த ஆளுங்க...காலையில வெட்டியா இந்த நடை நடக்கறாங்க...பகல்ல பக்கத்து வூட்டுக்குகூட பைக் எடுத்துக்கிட்டுப் போறாங்களே...’ங்கறதுதான். ஆனா...இத யார்கிட்டயும் நான் கேட்டதில்ல. ’க்ண்ட்ரி ப்ரூட்...ஸ்டுப்பீட்’னு ஏடாகூடமா ஏசிட்டா...என்னா பண்றதுன்னு ஒரு அச்சந்தான். மாடிப்படி ஏற லிப்டு, சாப்பிங்க் மாலுக்குப் போனா...எலிவேட்டரு, காரு, பைக்குன்னு... நடக்காம வாழறதுக்குன்னே நெறய கண்டுபிடிச்சு வச்சிருக்கும்போது...பகல்ல எந்தக் கேனப் பயலாச்சும் நடப்பானா?ன்னு எனக்குள்ளயே ஒரு அசரீரி கேக்குது.

எங்க ஊர்லல்லாம்...இந்த சர்க்கர வியாதின்னா என்னான்னே தெரியாது.ஒபீசீடி ஏபீசீடி இந்த மாதிரிப் பேருங்களையெல்லாம் எங்காளுக கேள்விப்பட்டதும் இல்ல. கொஞ்சம் குண்டா இருக்கற ஆளுகளைப் பார்த்தா எங்க அம்மாச்சி...’தின்னுப்புட்டு கொளுத்துப் போயி கெடக்கு பாரு...தேர மாதிரி...போய் எதுனாச்சும் வேலை வெட்டி செஞ்சாத்தானே...கறி எளைக்கும்’னு பட்டயக் கெளப்பும்.
ஆனா...அதுக்குத் தெரிஞ்சது அவ்ளோதான். டெக்னாலஜி, சயிண்டிபிக் அட்வான்ஸ்மெண்ட் இதெல்லாம் அதுக்குப் புரியாது.
தெரிஞ்சிருந்தா...’ஒரே மாசத்துல டென் கேஜி வெயிட் லாஸ் பண்ணணுமா...? ஜஸ்ட் ஒரு லட்சம் ருபீஸ்தான்’னு வெளம்பரம் பண்ற கம்பெனிக்கு ஆள் அனுப்பற வேலையப் பார்த்து நாலு காசு சம்பாதிச்சிருக்கும்.

ஆனாலும்...எனக்கு இருக்கற சந்தேகம் என்னான்னா...சக்கர வியாதி, ஹார்ட் அட்டாக்கு, குண்டு ஒடம்பு, கொலஸ்ட்ராலு இப்புடிப் பல பிரச்சினைகளுக்காக லட்ச லட்சமா செலவு செஞ்சு ஜிம்முக்குப் போறவங்க...வொர்க் அவுட் பண்றவங்க...வாகிங்க் போறவங்க...ஜாகிங்க் போறவங்க...எல்லாரும்...அவுங்க அவுங்க வூட்டுலயே ஒரு தோட்டம் போட்டு...காய்கறி விளைய வச்சா என்னா?
’அட...ங்கொய்யால...என்னா திமிரு பார்த்தியா இவனுக்கு...?’ன்னு நீங்க திட்டுனாலும் பரவாயில்ல...நமக்கு சூடு சொரணை எல்லாம் கொஞ்சம் கம்ம்மிதான்னு வச்சுக்கங்க.

எதுக்குச் சொல்றென்னா...ஒங்களுக்கு என்னா பிரச்சினை? ஒடம்புல தேவைக்கு அதிகமா...கொழுப்பு சேரக்கூடாது...கலோரி இருக்கக் கூடாது...அதுக்கு வேலை செய்யணும்...அதாவது ஒடம்பு வணங்கணும்...அதானே...?

மண்வெட்டியப் புடிச்சு நாலு கொத்து கொத்துனா...கொழுப்பு கலோரியெல்லாம் வேர்வையோட வேர்வையா டீசண்டா டிஸ்போஸ் ஆயிரும்கறது எங்க ஊர் நம்பிக்கை. அதுமட்டுமில்ல...ஒங்களுக்குக் காய்கறி செலவும் மிச்சம்...நீங்களே போட்ட காயை நீங்களே சாப்பிடும்போது எக்ஸ்ட்ரா டேஸ்ட் இருக்கும்கறதும் எங்க ஊர் அனுபவம். வீடாவது... தோட்டமாவது...எங்க வீடே அபார்ட்மெண்டுல தொங்கும் தோட்டம் மாதிரி இருக்கு...ன்னு புலம்பினா... நான் என்னா பண்றது?

’பேசாம...அந்த சனியன் புடிச்ச ஊர விட்டுட்டு...சொந்த ஊருக்குப் போங்க’ன்னு நான் சொல்ல முடியுமா? அப்புடிச் சொன்னா...’அந்த ஊர்ல என்னா...எம்ப்ளாய்மெண்ட் இருக்கு?ன்னு எதிர்க் கேள்வி கேப்பீங்க. நம்மளப் பொறுத்தவரைக்கும்...

சம்பாதிக்கறதுக்காக...ஊர விட்டுப் போகணும்...
அப்பொறம்...அந்த ஊர்ல இருக்கறதுக்காக சம்பாதிக்கணும்...(சர்வைவல்தானே சார் முக்கியம்?)

அப்பொறம்...வைத்திய செலவுக்காகவே சம்பாதிக்கணும்...(ஹெல்த்தப் பார்த்துக்கோங்க சார்...ஹெல்த் இஸ் வெல்த்)

இல்லன்னா...நாப்பதுக்குள்ளேயே மாரடைப்பு...சக்கர...ன்னு சில பல பதக்கங்கள வாங்கிக் குத்திக்கிட்டு வாக்கிங் ஜாகிங்னு காலத்த ஓட்டணும்...
-இதானே...நம்ம கொள்கை கோட்பாடு!
நாம...வாழவா பொறந்தோம்?
சாவத் தள்ளிப் போடத்தானே பொறந்தோம்!

அதனால....சொந்த ஊருக்குப் போறதெல்லாம்...பொச கெட்டப் பயலுக செய்யறது வுட்டுத் தள்ளுங்க...!

கடைசியா ஒண்ணு சொல்றேன்...
நீங்க...சுகர் ப்ரீன்னு லேபிள் ஒட்டின...சர்க்கரக் கட்டிங்களை மட்டும்தான் சாப்புடுறீங்களா...? ஐயோ சாமீ...ஆபத்து...!

அத மட்டும் சாப்புட்டா....ஏகப்பட்ட வில்லங்க வியாதிங்க வருதாம்....அதுக்குப் பதிலா...அளவா...நாட்டுச் சக்கரதான் சாப்புடணுமாம்! நாட்டுச் சக்கரய நீங்க மறந்திருப்பீங்க...
கருப்பா இருக்கும். கொஞ்சூண்டு போட்டாலும் தித்திக்கும். கரும்புல எடுத்தா நாட்டுச் சக்கர. பனையில எடுத்தா கருப்புட்டி. இதுகளைச் சாப்பிட்டா...அளவா சாப்பிட்டா நல்லதாம். இதையெல்லாம் எங்க அம்மாச்சி சொன்னப்ப நானே நக்கல் பண்ணவந்தான். ஆனா...இப்ப இத சொல்லியிருக்கறது...மெத்தப் படிச்ச மருத்துவ மேதைங்க...!

என்னாடா...எல்லாத்தையுமே தலகீழா சொல்றானேன்னு நீங்க நினைக்கறீங்க...
மரத்துல தொங்குற வௌவால்கிட்ட போய் தலையை மேல வையின்னா சொல்ல முடியும்? அதுக்கு அதுதான் சொகம்...நாம மனுசங்க...தலை மேலதானே இருக்கணும்...?
புரியல...?
கலோரி, கொலஸ்ட்ரால் பூச்சாண்டிக்கெல்லாம் பயந்து வாகிங் ஜாகிங்னு காமெடி பண்றதுதான்...வௌவால் தனம்...நிமிர்ந்து நில்லுங்க...பாசு...ஊர்க் காட்டுப் பக்கம் வந்து பாருங்க...நாங்கல்லாம் எப்புடீ வாழறோமுன்னு!

நாட்டு சக்கரைக்கான வெளம்பரம்:
'Jaggery better than white sugar'
Doctors say jaggery can be used as a substitute for white sugar, as it contains more iron and minerals. Figs and dates are also considered as healthy substitutes for white sugar. Dietician Mridula Wattas says those who are very particular about using a sugar substitute can opt for stevia, a herb which is easily available in nurseries, or stevia-based sweeteners.

http://in.news.yahoo.com/48/20100115/804/tnl-how-safe-are-sugar-substitutes-exper.html

Friday, November 20, 2009

உங்களுக்கு மீன் புடிக்குமா…? ஐயோ பாவம்…!

‘பந்தியிலயே இடமில்லன்னாச்சாம்…ஒருத்தன் இலை பிஞ்சிருக்குன்னானாம்’னு எங்க அம்மாச்சி அடிக்கடி சொல்லும். இந்தப் பழமொழி எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா…வெகு பேரு இப்படித்தான் நடந்துக்குவாய்ங்க. சமீபத்திய உதாரணத்தையே எடுத்துக்கோங்க.
இந்த மீனவருங்க இருக்காங்களே…இவங்கள்லாம் மீன் புடிக்கப் போனா சிங்களன் சுட்டுக் கொல்றானாம். இப்பல்லாம் சிங்களப் படகுல சீனாக்கார ஈ கண்ணனுங்களும் வர்றானுகளாம். (மூஞ்சிக்கு நேரா ஈ பறந்தா கண்ண சுருக்குவோமே அதே மாதிரியே சீனாக்காரங்க கண்ணு இருக்கறதால…எங்க ஊரு பாலக்கட்டையில கும்பலா குந்தி சிந்திச்சு வச்ச பேரு இது)

மீனவங்களுக்கு அறிவுன்னு ஒண்ணு இருக்கா இல்லலையான்னே தெரியல. அரசாங்கம் என்ன நினைக்குது? இவங்கள்லாம் மீனே புடிக்க வேணாம்னு நினைக்குது. அதாவது ஆணியப் புடுங்க வேணாம்!

அதைப் புரிஞ்சுக்காம அவன் சுடுறான் இவன் அடிக்கிறான்னு ஒப்பாரி வச்சா கேக்கறதுக்கே சிப்பு சிப்பா வரல? மீனவருங்கல்லாம் சரியாப் படிக்கிறதே இல்ல. அதான் அவங்க பிரச்சினை. நம்மளை மாதிரி ஹிண்டு, தந்தி, தினமலர், என் டி டி வி, டிஸ்கவரி, ஸ்டார் நியூஸ், சி என் என் னு பிரிச்சு மேய்ஞ்சா…கொஞ்சமாவது ஒலக அறிவு இருக்கும்.

நாமல்லாம் ஏதோ ஒரு கிராமத்திலயோ…சின்ன நகரத்திலயோ பிறந்தவங்கதானே…? நம்ம அப்பன் ஆத்தா விவசாயம் செஞ்சுக்கிட்டோ ஆடு மாடு மேச்சுக்கிட்டோ…ஆசாரியாவோ நெசவாளராவோ இது மாதிரி வேற ஏதாச்சும் தொழில் செஞ்சவங்கதானே…? இல்லன்னா நம்ம தாத்தா பாட்டியாச்சும் இந்த மாதிரி தொழிலுங்களைப் பார்த்திருக்கலாம். அரசாங்கம் பசுமைப் புரட்சின்னு ஒரு திட்டத்தைப் போட்டுச்சு.

அதுக்கு என்ன அர்த்தம்? வெவசாயம் ஆடு மாடு மேய்க்கறவங்கல்லாம் பொழப்ப வுட்டுட்டு ஓடுங்கடா…நிலத்தையெல்லாம் வெளிநாட்டு கம்பெனிங்களுக்கு விக்கப் போறோம்னு அரசாங்கம் பசுமைப் புரட்சி வெண்மைப் புரட்சிங்கற பேருங்கள வச்சு ஜிங்குசா ஜிங்குசான்னு சொன்னிச்சு. நாம எவ்வளவு கண்ணியமா கட்டுப்பாடா கடமை உணர்ச்சியோட ஊர விட்டுட்டு வந்து அலேகா…சென்னையிலயோ…பிட்ஸ்பர்க்லயோ பீட்சா தின்னுக்கிட்டிருக்கோம். இதானே மனுசப் பிறவிக்கு அழகு?

இந்த மீனவருங்களப் பாருங்க…கொஞ்சம் கூட நடைமுறை அறிவு இல்லாம எவன் சுட்டாலும் மீன் புடிக்கத்தான் செய்வோம்னு நிக்குறாங்க. அதான் நம்ம இந்தியா இப்ப வச்சிருக்கு ஒரு ஆப்பு…! மவனே…இதுலேருந்து மட்டும் தப்பவே முடியாது.

அதாவது…இந்திய மீன்பிடித் தொழில் ஒழுங்குமுறை ஆணையம் கொடுத்த ரோசனைகளை வச்சு இந்திய அரசாங்கம் இப்ப புதுசா ஒரு சட்டம் கொண்டு வரப் போகுது. அந்தச் சட்டம் மட்டும் வந்துட்டா…இந்த மீனவருங்கல்லாம் நம்மளை மாதிரி பொழப்பு தேடி வந்துதான் ஆகணும். மான ரோசம்தான் முக்கியம்னு முட்டாத்தனமா முடிவெடுத்தா கடல்ல வுழுந்து சாகணும்.

அந்தச் சட்ட முன் வரைவு என்ன சொல்லுதுன்னா…
• மீனவர்கள் எல்லாம் இனிமேல் மீன் பிடி உரிமம் (லைசென்ஸ்) வாங்கிப் பதிவு செய்துக்கணும்
• மீனவர்கள் தங்கள் விருப்பம் போல் மீன் பிடிக்கக் கூடாது. எந்த தேதியில என்ன வகை மீன் எவ்வளவு கிலோ பிடிக்கணும்னு அரசாங்கம் ஒவ்வொரு மீனவருக்கும் ஒரு பட்டியல் கொடுக்கும். அதன்படித்தான் பிடிக்கணும். சும்மா இஸ்டத்துக்கு புடிக்கக் கூடாது.
அதாவது, நான் வலை போட்ட எடத்துல சங்கரா மீனுதான் வந்துச்சுன்னு சாக்கு போக்கு சொல்லக் கூடாது. அரசாங்கம் நெத்திலி புடிக்கச் சொன்னா…கிடைச்ச சங்கராவை அப்புடியே கடல்ல கொட்டிட்டு…நெத்திலி தேடி வலை வீசணும். அதே மாதிரி 100 கிலோவுக்கு மட்டும்தான் பர்மிட்டுன்னா…வலையில 101 கிலோ வந்துட்டா…அந்த 1 கிலோ மீனையும் கடல்லயே நீச்சலடிக்க விட்றணும். வேணும்னா…இந்தக் கவலைகளை மறக்கறதுக்காக…கரைக்கு வந்து சரக்கடிச்சுட்டு சாயலாம். அதுக்கு பர்மிட் லிமிட் எதுவும் இல்ல.

• மீன் பிடிப் படகுகளைச் சோதனையிட இனிமே ஆபீசருங்க எங்க வேணா வருவாங்க. எப்ப வேணா வருவாங்க. அவங்களைப் பார்த்ததுமே…இந்தியன் பட கவுண்டமணி கணக்கா ‘குட் மார்னிங் ஆபீசர்’ னு சல்யூட் வச்சு எல்லாத்தையும் தெறந்து காட்டணும். இதுக்குப் பதிலா யாராச்சும் அந்த ஆபீசருங்களை அவமதிச்சா…6 லட்சம் ரூபா அபராதம்!
• அப்புறம் முக்கியமான விசயம்…இனிமே மீனவருங்கள்லாம் முன்ன மாதிரி திமிரெடுத்துப் போயி…இந்திய எல்லை வரைக்கும் போறேன் சர்வ தேச எல்லைக்குப் போறேன்ன்னு போகக் கூடாது. கரையிலருந்து 12 கடல் மைல் மட்டும்தான் போகணும். அதைத் தாண்டி ஒரு அடி வச்சாலும் 9 லட்ச ரூபா அபராதம், ஆறு மாசம் ஜெயிலு.
• வெளிநாட்டுப் படகுகள் மீன் புடிக்கிற கப்பலுங்கல்லாம் இப்ப இந்திய எல்லைக்கு வெளியேதான் நிக்கிது. பாவம்…எம்மாந்தூரம் வந்திருக்காங்க…அவங்களை அங்கேயா நிக்க வைக்கறது…? அதனால இனிமே அந்த வெளிநாட்டுப் படகுகளும் கப்பலுங்களும் இந்திய எல்லைக்குள்ளக் கூட வரலாம் மீன் புடிக்கலாம். அவங்களுக்கு எல்லையே இல்லை.
• மீனவருங்க மேற்படிச் சட்டத்தை மதிக்காதப்போவெல்லாம் அவங்களோட படகுங்களைப் புடுங்கலாம் வலையக் கிழிக்கலாம்.(மீனவர் பிரச்சினையில என்னத்தப் புடுங்கினீங்க? என்னத்தக் கிழிச்சீங்கன்னு எவனும் கேக்கக் கூடாதுன்னு இந்த ஏற்பாடு)

இது மாதிரி இன்னும் நிறைய ஆப்புங்க இருக்கு.
இந்தச் சட்டம் இப்ப பாராளுமன்றத்துல நிறைவேற்றப்படப் போவுது. இது மட்டும் சட்டம் ஆயிட்டா…மீனவருங்கல்லாம் உள் நாட்டு அகதிங்கதான்.

நமக்காச்சும் வித்துட்டுக் கஞ்சி குடிக்க நிலம் இருந்துச்சி… இருக்கு. மீனவருங்களுக்கு ஒரே சொத்து கடல்தான். இப்ப அதையும் மொத்தமா வழிச்சு எடுத்து பன்னாட்டுப் பரதேசிங்களுக்குக் கொடுத்தாச்சு. ஆக மொத்தத்துல மீனவர்கள் எல்லாரும் சென்னை கோவை மாதிரி நம்ம ரேஞ்சு நகரங்களுக்குக் கூலி வேலை செய்ய வந்துடுவாங்க.

பிளாட்பாரத்துலதான் தங்குவாங்க. நாம போறப்ப வர்றப்ப அந்த எடமே நாத்தமடிக்கும். என்னத்த பண்றது…? சகிச்சுக்கிட்டுதான் போகணும்.
‘சார்…கவர்மெண்ட்ல என்ன சார் பண்றான்…இந்த பிளாட்பாரத்துல நடக்க முடியுதா சார்…? நாஸ்டி பெலோஸ்…’னு கடுப்புல கத்துவோம்.

ஆனா…இதெல்லாம் கூட சகிச்சுக்கலாம். நாம மீன் சாப்பிடணுமே…அதுக்கு என்னா வழி…?

மெக் டொனால்ட் பிஸ் பிரை
ரிலையன்ஸ் பிஸ் க்ரேவி
டாடா பிரஸ் பிஸ்
-இப்படின்னு பல ப்ராண்டுகள் நமக்குக் கிடைக்கும் போங்க. என்ன…எல்லாம் டின்னுல அடைச்சு வரும். புடிச்ச தேதியிலருந்து 6 மாசம் வரைக்கும் பயன்படுத்தலாம்னு தெளிவா எழுதியிருப்பான். மீன் சந்தையில மீன் வாங்கறப்போ…புது மீனான்னு பாக்க மீனோட செவுளத் தூக்கிப் பார்ப்போமே…அது மாதிரியெல்லாம் பார்க்க முடியாது. பார்த்தா சூப்பர் மார்க்கெட் செக்யூரிட்டியே நம்ம செவுளை செவக்க வச்சிடுவாரு.


வெலை…?
1 கே.ஜி- சங்கரா பிஸ் – 515.90 ருபீஸ் (லோக்கல் டேக்ஸஸ் எக்ஸ்ட்ரா)

நமக்கு இதென்ன புதுசா…?
நாட்டுக் கோழி வளர்த்தா வாசல்ல எச்சம் போடும்னு அருவருப்புப்பட்டுக்கிட்டு…கோத்ரெஜ் சிக்கன், கெண்டகின்னு விதவிதமா தின்னுப் பழகினவங்கதானே!

விவசாயிகளை ஒழிச்சாச்சு, நெசவு, நகைத் தொழிலாளர், ஆடு மாடு வளர்த்தவங்கன்னு சகல தமிழ் குழுக்களையும் ஓட ஓட விரட்டி அடிச்சாச்சு. கிராமங்கள்ல நோக்கியா, மிச்சலின், டாடா கம்பெனிகள் மின்வேலி போட்டு கும்மியடிக்குது.

மிச்சம் இருந்தது மீனவருங்கதான். அவங்களையும் அடிச்சி விரட்டத்தான் இந்த சட்டம் வருது.
ஆனா…இதெல்லாம் நம்ம பிரச்சினைங்க இல்ல. இதுக்காகவெல்லாம் கவலைப்பட நாம என்ன ஊர் மாக்கானுங்களா…?
நாம நிலத்தை வித்துப் படிச்சதே ஊரைவிட்டு ஓடத்தானே…!
இப்படிச் சொல்றதுக்காக எம் மேல கோவம் கூட வரும். ஆனா...நான் ஏன் இதச் சொல்றேன்னா...மீனவருங்களுக்கு இன்னிக்குத்தான் ஆப்பு விழுவுது. மலைவாழ் மக்களுக்கு என்னிக்கோ வுழுந்துடுச்சு. அப்பல்லாம் நாம என்ன செஞ்சோம்னு யோசிச்சுப் பாருங்க.

நாம நம்ம மண்ண நேசிச்சிருந்தா...என்ன படிச்சாலும் என்ன வேலை செஞ்சாலும் ஊர்ல இருக்கற தம்மாத்தூண்டு நிலத்துல ஏதாச்சும் விதைச்சு அறுத்துக்கிட்டிருந்திருப்போம். ஆனா...நாம என்ன செஞ்சோம்?
படிக்க, காது குத்த, குடிக்க, கல்யாணத்துக்கு, வேலை வாங்க மாமூலுக்கு...இப்படி டைப் டைப்பான காரணங்களுக்காக நிலத்த வித்தோம்.

இன்னிக்கு சொந்த ஊர் எதுன்னு கேட்டா நம்ம வாரிசுங்க...திரு திருன்னு முழிக்குதுங்க. அரசியல், கம்யூனிசம், புரட்சி புண்ணாக்கு...இதெல்லாம் இருக்கட்டும் சாமீ...அவனவன் ஊர்ல அவனவனுக்குன்னு நாலு காணி நிலம் இருக்கணும்னு யாருக்குமே தோணாம போச்சே...

நம்மல்லாம் இப்புடி சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கிட்டதப் பார்த்துதான் அரசாங்கங்களுக்கு தெனாவட்டு வந்திருக்கு...இப்ப மொத்த கடலையும் பன்னாட்டுப் பன்னாடைங்களுக்கு எழுதி வச்சிட்டாய்ங்க.

ஆக...மீனவருங்க வடிக்கற கண்ணீருக்கு அவங்க மட்டுமே காரணமில்ல...நாமளும்தாங்கறது என்னோட விசனம்...
நீங்க என்னா நெனைக்கறீங்க...?

Sunday, October 18, 2009

‘ஈழம் காத்த தானைத் தலைவன் ராஜபக்சே-...’திருமா வழங்கும் புதிய பட்டம்?

திருமாவளவன் அவர்களே
வணக்கம் சொல்ல விருப்பமில்லை. நாங்கள் முகமன் கூறும் தகுதியை நீங்கள் இழந்து வெகு நாட்கள் ஆகின்றன. இந்தக் கடிதமும் நீங்கள் மனம் மாறுவீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதப்படவில்லை. ஏனெனில், மூடநம்பிக்கைகளை ஒழிக்கப் புறப்பட்டவன் எங்கள் பாட்டன். அவன் வழியில் நடப்பவர் நாங்கள்.

கசாப்புக் கடைக்கு இழுத்துச் செல்லப்படும் ஆடு, அரிவாள் தன் கழுத்தில் இறங்கும் வரை தன்னை வளர்த்தவன் மீது நம்பிக்கை கொண்டு அவன் முகத்தைப் பார்த்தபடியிருக்குமே...அதுபோல் எங்கள் மக்களில் ஒரு பெருந்திரள் உங்கள் மீது இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளது. அவர்களுக்கு உங்கள் முதுகில் மறைந்திருக்கும் அரிவாளைக் காட்டவே இக் கடிதம்.

’அடங்க மறு; அத்து மீறு’ என்ற கட்டளைகளுடன் தாழ்த்தப்பட்ட மக்களின் சம உரிமைக்காக அரசியல களம் கண்ட நீங்கள், 2000ஆம் ஆண்டு தேர்தல் அரசியலில் நுழைந்தீர்கள் என்பது உங்களை நம்பும் அப்பாவிகளிடம் நீங்கள் காட்டும் வரலாறு.

ஆனால்...உண்மையில் இதை இப்படிச் சொல்ல வேண்டும்:
’தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் ஆதிக்க சாதி வெறி பிடித்த கும்பலின் தலைவருமான...குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் பகைவரான கருப்பையா மூப்பனார் உங்கள் கட்சிக்கு நல்ல விலை கொடுத்து வாங்கிய சம்பவம் அது’

இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா?
எந்த மூப்பனார்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் வாயில் சாணிப்பால் கரைத்து ஊற்றினார்களோ...எந்த மூப்பனார்கள் இன்று வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தேநீர்க் கடைகளில் இன்று வரை தனிக்குவளை வைத்திருக்கிறார்களோ...எந்த மூப்பனார்கள் தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களை பறித்துக்கொண்டார்களோ...அந்த மூப்பனார்களின் தலைவர்தான் கருப்பையா மூப்பனார் என்பதை நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்!
மூப்பனார்களுக்கெதிராகவும் வன்னியர்களுக்கு எதிராகவும் நீங்கள் முழங்காத கிராமங்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலும் கடலூர், வட ஆற்காடு மாவட்டங்களிலும் குறைவு.

ஆனால்...அதெல்லாம் நீங்கள் தேர்தல் சாக்கடையில் இறங்கி புழு பிடித்துத் தின்னத் தொடங்கியதற்கு முன்பு.

’ஐயா...மூப்பனார் அவர்கள் சமூக நீதி காத்த தலைவர்’
-இது நீங்கள் கருப்பையாவுக்குக் கொடுத்த பட்டம்தான்! சிதம்பரம் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இப்படிப் பேசினீர்கள்.

அதன்பிறகு...ஆதிக்க சாதி கருப்பையா...சமூக நீதி காத்த தலைவர் மூப்பனார்’ என்று அழைக்கப்பட்டார். எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்தான்.
’வன்னியர்கள்தான் வட மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டவரின் முதல் எதிரி!’
-என்ற அறைகூவல் உங்களுக்கு நினைவிலிருக்க நியாயமில்லை.
ஆனால்...
உங்கள் உசுப்பேற்றுதல்களால்...அடங்க மறுத்து அத்து மீறி வன்னியர்களுடன் மோதி கை கால்களை இழந்த பல நூறு தாழ்த்தப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு அந்த அறைகூவல் மறந்திருக்காது. சாதி மோதல்களில் இறந்தே போன தாழ்த்தப்பட்ட தோழர்களின் குடும்பங்கள்,
நீங்களும் மருத்துவர் ராமதாசும், வன்னியர் சங்கத் தலைவர் குருவும் கை கோர்த்து நடப்பதையும் தொலைக்காட்சி செய்திகளில் சிரிப்பதையும் பார்க்கும்போது மனதுக்குள் என்ன நினைப்பார்கள் என்று என்னைப் போன்ற சாமானிய மனிதனுக்குத் தெரியும்.
உங்களைப் போன்ற தலைவர்களுக்குத் தெரியுமா?

’வட மாவட்டங்களில் இருந்த சாதி மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்ததே எங்கள் அரசியல் கூட்டணிதான்’
-என்று நீங்களும் ராமதாசும் எத்தனையோ முறைகள் அறிவித்திருக்கிறீர்கள்.

அடடா...
சாதிச் சிக்கலை நீங்கள் இருவரும் எவ்வளவு எளிதாகத் தீர்த்துவிட்டீர்கள்!



வட மாவட்டங்களில் வன்னியர்கள்தான் இன்று வரைக்கும் ஆதிக்க சாதியாக நீடிக்கிறார்கள் என்பதும், பாமக, தேமுதிக, ஜெகத்ரட்சகன் ஆகிய அரசியல் காரணிகள் வன்னிய ஆதிக்கத்தை முன்னைக் காட்டிலும் வலுப்படுத்தியுள்ளன என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்!

ஏனெனில்...தேர்தல் கூட்டணி அமைப்பதே சாதி மோதலைத் தவிர்க்கும் வழி என்ற புதிய கோட்பாட்டைக் கண்டுபிடித்தவராயிற்றே நீங்கள்!

இன்றும்...வட மாவட்டங்களில் தேர்தல் பதவிகள்...எம் எல் ஏ முதல் கவுன்சிலர் வரை வன்னிய சாதியினரே ஆதிக்கம் செய்கின்றனரே...

வட மாவட்டங்களில் வாண்டையார்கள், ரெட்டியார்கள், வன்னியர்கள் உள்ளிட்ட ஆதிக்க சாதியினர் ஆகப் பெரும்பான்மையான நிலங்களை வைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களை வெறும் கரும்பாலைக் கூலிகளாகவும் விவசாயக் கூலிகளாகவும் வைத்திருக்கின்றனரே...

விழுப்புரம், பண்ருட்டிப் பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் அலை அலையாகக் கிளம்பி...தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கரும்பு வெட்டும் கூலிகளாகப் போய்க்கொண்டிருக்கின்றனரே...

கரும்பு வெட்டப் போகும் தாழ்த்தப்பட்ட மக்களின் அவலங்களில் முக்கியமானது...அவர்கள் மாதக் கணக்கில் வெளி மாவட்டங்களில் தங்க வேண்டியிருப்பதால் குடும்பத்தோடு மனைவி மக்கள் குழந்தைகள் என அனைவரையும் அழைத்துச் சென்று...கூடாரங்கள் அடித்துத்தான் தங்குகின்றனர்.

இது போன்ற சூழல்களில் அடித்தட்டுப் பெண்களும் குழந்தைகளும் எவ்வளவு மோசமாக சுரண்டப்படுவார்கள் என்று எங்களைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

உங்களைவிட...’விளிம்பு நிலை’ வித்தகர் உங்கள் சாணக்கியர் ரவிக்குமாருக்கு மிக மிக நன்றாகத் தெரியும்.

இப்படிப் பிழைப்புக்காக...குடும்பங்களோடு அலையும் மக்களை உலகம் ‘நாடோடிகள்; ‘உள் நாட்டு அகதிகள்’ என்றெல்லாம் அழைக்கிறது.

நீங்கள் இவர்களுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள் திருமா?

‘மாண்புமிகு வாக்காளப் பெருமக்கள்’-என்றுதானே?

நீங்களும் ராமதாசும் வைத்துக் கொண்டுள்ளது பிழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை. அதைக் கூட்டணி என்று நீங்களும் உங்களைப் போன்றவர்களும் அழைப்பீர்கள்.

சாதி சமத்துவத்திற்கும் உங்கள் பிழைப்புவாதப் புரிந்துணர்வுக்கும் யாதொரு உறவும் இல்லை.

தமிழக அரசியலில் ...தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியலில் உங்கள் சாதனைகள் இவைதான்.

இதோடு நீங்கள் நிறுத்தியிருக்கலாமே...!

தமிழீழ மக்களையும் விடுதலைப் புலிகளையும் கூடவா விற்றுப் பிழைக்க வேண்டும்?

இனத்தை அழிக்கும் காங்கிரசுக்கு எதிராகத் தமிழ்நாட்டின் கணிசமான இயக்கங்களும் தேர்தல் கட்சிகளும் தீவிரமாக வேலை செய்தபோது...காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தீர்கள். இது முதுகில் குத்திய பாவம் என்பதை உங்கள் மூளையின் ஒரே ஒரு செல் கூட உரைக்கவில்லையா?

இப்போது வன்னி முகாம்களுக்கு நீங்களும் உங்கள் புதிய கூட்டாளிகளும் இன்பச் சுற்றுலா போனபோது, அங்கே கதறிய மக்கள் முகங்களைப் பார்த்தபோது ஒரே ஒரு கணம் கூட...
‘இந்த முள்வேலி வாழ்க்கைக்கு நானும்தான் ஒரு காரணம்’
என்ற உண்மை மின்னல் போலவேனும் வந்து போகவில்லையா?

அப்படி எந்த நியாய உணர்வும் உங்களுக்கு இல்லை என்பதை உங்கள் பேட்டிகள் நிறுவுகின்றன.

ராஜபக்சே உங்களைப் பார்த்து ‘நல்ல வேளை கடைசி நேரத்தில் நீங்கள் பிரபாகரனோடு இல்லை. ஒருவேளை இருந்திருந்தால்...நீங்களும் காணாமல் போயிருப்பீர்கள்’ என்று எள்ளி நகையாடிய சேதியை இணையத்தில் படித்துவிட்டு உளம் கொதித்தோம்.

ஆனால்...அந்த கிண்டலைக் கேட்ட பிறகும் நீங்கள் ராஜபக்சேவுடன் உரையாடி மகிழ்ந்து...எந்தக் கணத்திலும் அவன் மனம் சுருங்காமல் நடந்துகொண்டீர்கள்.

வெளியே வந்ததும் பத்திரிகையாளர்கள் இதைப் பற்றிக் கேட்டபோது,
‘அது ஒரு ஜோக்...அவர் தமாசுக்கு அப்படிச் சொன்னார்’ என்று அதே உங்கள் பிராண்ட் அசட்டுச் சிரிப்பு சிரித்தீர்களே.

கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் போனது எப்படி?
சுய மரியாதை என்ற உணர்வு சில பிராணிகளுக்குக் கூட உள்ளது என்கிறது விஞ்ஞானம். ஆனால்...உங்களுக்கு அது அறவே இல்லாமல் போனது எப்படி?

எழு இனி நெஞ்சம் செல்க யாரோ
பருகுஅன்ன வேட்கை இல்வழி’
-என்ற புறநானூறுப் பாடல் பெருஞ்சித்திரனார் எனும் மானமுள்ள புலவர் இயற்றியது.

இளவெளிமான் எனும் மன்னனைச் சந்தித்துப் பரிசில் பெறச் சென்றார் பெருஞ்சித்திரனார். அம்மன்னன் அவருக்குப் பரிசில் அளித்தான். ஆனால் அந்த நேரத்தில் மன்னன் முக பாவம் சரியில்லை.
இதைக் கண்ட பெருஞ்சித்திரனார்,
’உள்ளம் மகிழ்ச்சி அடையாமல், முக மாற்றம் அடைந்து பரிசில் அளித்தால்...மானமுள்ளவர் அதை ஏற்கமாட்டார். எப்படிக் கொடுத்தாலும் வாங்குபவர் உளர். ஆனால்...நான் அப்படிப்பட்டவன் அல்ல.
இந்த உலகம் பெரிது. நான் வேறிடம் செல்கிறேன்’
-என்று பாடிவிட்டு வெளி நடப்பு செய்தார்.

பரிசில் பெறச் சென்ற புலவரே மன்னனின் முகம் பார்த்து செருக்குடன் பரிசில் வாங்காது சென்ற மரபு நம் மரபு.

நீங்கள் சென்றது இனத்தின் எதிரியான ராஜபக்சேவின் விருந்தினராக. அவன் உங்களைப் பார்த்துப் பேசிய கிண்டல் சொற்கள் உங்களைப் பற்றியது மட்டுமல்ல; தமிழீழத் தேசியத் தலைவரையும் குறித்தவை.

ஆனால்...உங்களுக்குக் கொஞ்சமும் .............இல்லாமல் பல்லிளித்துவிட்டு வந்தீர்கள்.
அவன் கேலி பேசிய மறு கணமே...அந்த இடத்திலிருந்து வெளிநடப்பு செய்ய வேண்டும் என்று ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை?

அதைக் காட்டிலும், ஜூனியர் விகடனில் நீங்கள் அளித்துள்ள நேர்காணலில்,
’ராஜபக்சே தன் வக்கிரங்களைத் திரட்டி அந்த வார்த்தைகளைச் சொன்னார்’
என்று முழங்கி இருக்கிறீர்கள்.

சென்னை விமான நிலையத்தில் ’அது ஒரு ஜோக்’காகத்தானே தெரிந்தது உங்களுக்கு?
ஜூவியில் பேசும்போது மட்டும் எங்கிருந்து வந்தது கோபம்?

விடை எனக்குத் தெரியும்!

விமான நிலையத்தில் உங்கள் அருகில் உங்கள் எஜமானர்கள் – உங்களுக்குப் படியளப்பவர்கள்- டி ஆர் பாலு, கனிமொழி, காங்கிரஸ் எம்பிக்கள் இருந்தனர். அவர்களை வைத்துக் கொண்டு ராஜபக்சேயைத் திட்டும் துணிவும் செருக்கும்நேர்மையும் உங்களுக்கு இல்லை.

அதே வேளை தமிழீழ ஆதரவுக் கூட்டத்தை ஏமாற்றாமல் உங்களால் அரசியல் வியாபாரம் செய்ய முடியாது. அதனால்...பாதுகாப்பாக பதுங்கிகொண்டு பத்திரிகையாளரிடம் பேசும்போது எகிறி அடிக்கிறீர்கள்.

இது கருணாநிதி, ராமதாஸ் ஆகிய உங்கள் முன்னோடிகளிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்ட கலை.

ராஜபக்சே எனும் பக்கத்து நாட்டுக்காரனைக்கூட எதிர்க்கும் துணிவும் நேர்மையும் இல்லாத நீங்கள்...தங்களை சாதி ஆதிக்கப் பிடியிலிருந்து விடுவிப்பீர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறதே பாவப்பட்ட இளைஞர் கூட்டம். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

மூப்பனார் சமூக நீதி காத்த தலைவர் ஆனது போல...
ராஜபக்சேவுக்கு என்ன பட்டம் தரலாம் என்று யோசித்து வையுங்கள்...
‘ஈழம் காத்த தானைத் தலைவன் ராஜபக்சே...’
எப்படி இருக்கிறது...?




நாக்பூரில் உள்ள புத்த மடத்தில் புத்தனை வணங்கும் திருமா...
வன்னி சென்றபோது சிங்கள வெறிப் படையினரால் இடிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் இருந்த இடங்களையாவது பார்வையிட்டாரா...?

ஒருவேளை அவர் விரும்பினாலும் அவரைச் சுற்றுலாவுக்குக் கூட்டிச் சென்ற அவர் எஜமானர்கள் விட்டிருக்க மாட்டார்கள்!

Thursday, October 15, 2009

தீபாவளி வாழ்த்துக்கள்!



மத்தாப்புச் சிதறல்களில்
முகாம் குழந்தைகளின்
குருதிச் சிதறல்கள்
தெரியவில்லை என்றால்...

சரவெடிகளின்
இணைப்பு நூல்களைப் பார்க்கும்போது
முள் வேலியின்
சாயல் தெரியவில்லை என்றால்...

பூச்சட்டியின்
தீச் சுடர் மேலே
எழும்பி சாம்பலாய்
இறங்கும்போது
எரிந்த
எம் மக்களின்
பிண வீச்சம்
வீசவில்லை என்றால்...

நரகாசுரனைக் கடவுள் அழித்தாரென்ற
கதை கேட்கும்போது
வெள்ளைக் கொடியேந்திய
எம் தளபதிகள்
செங்குருதியில் மிதந்த
காட்சி கண்ணில் வரவில்லை என்றால்...

இனிப்புகள் பரிமாறிச்
சுகிக்கும்போதெல்லாம்...
பாலில்லா முலையில்
குருதி வழிய...
நா வறண்ட
எம் பிஞ்சுகள்
கதறும் ஓசை
உங்கள் காதுகளில்
விழவே இல்லை என்றால்...

உங்களுக்கு
என்
தீபாவளி வாழ்த்துகள்!